வினிகர் மற்றும் பொடி எதுவும் சேர்க்காமல் சுவையான பூண்டு ஊறுகாய் எப்படி செய்வது என்பதை பார்ப்போமா?
Advertisment
தேவையான பொருட்கள்:
காய்ந்த மிளகாய் – அரை கிலோ
உரிக்காத பூண்டு, - கால் கிலோ
Advertisment
Advertisements
புளி – அரைகிலோ
எண்ணெய் – அரை லிட்டர்
வெந்தயம் – 25 கிராம்
கடுகு – 50 கிராம்
கட்டி பெருங்காயம் – 1
கறிவேப்பிலை – ஒரு கொத்து
உரித்த பூண்டு – இரண்டரை கிலோ
தேவையான அளவு உப்பு
வெல்லம் – 50 கிராம்
செய்முறை:
முதலில் உரிக்காத பூண்டு, காய்ந்த மிளகாய், புளி ஆகிய மூன்றையும் மிக்ஸியில் சேர்த்து நன்றாக அரைத்து தனியாக எடுத்து வைத்துக்கொள்ளவும்.
அடுத்து ஒரு வாணலியை அடுப்பில் மவத்து அதில், எண்ணெய் சேர்த்து, அடுத்து வெந்தயம், கடுகு, கறிவேப்பிலை, கட்டி பெருங்காயம் சேர்த்து வதக்கவும்.
அதன்பிறகு உரித்த பூண்டை சேர்த்து வதக்கிவிட்டு, அரைத்து வைத்துள்ள காய்ந்த மிளகாய், புளி பூண்டு கலவையை இதில் சேர்த்து அடுப்பை சிம்மில் வைத்து கிண்டிக்கொண்டே இருக்கவும்.
45 நிமிடங்கள் கிண்டிய பிறகு, இறுதியாக வெல்லம் சேர்த்து கிண்டிவிட்டு இறக்கினால் சுவையான பூண்டு ஊருகாய் ரெடி. இதில் வினிகர் மற்றும் பொடி எனதுவும் சேர்க்கப்படவில்லை. நீங்களும் ட்ரைப்பண்ணி பாருங்க.