உடம்பை கட்டுமஸ்தாக வைக்க ராஜாக்கள் சாப்பிட்ட உணவு... இரும்புச்சத்து அம்புட்டு; இந்த பொரியல் மிஸ் பண்ணிடாதீங்க!
கர்ப்பப்பைக் கோளாறுகளை சரி செய்யும், ஆஸ்துமா, சளி போன்ற சுவாசக் கோளாறுகளுக்கும், மூட்டுவலி, உடல் வலி போன்ற பிரச்சனைகளுக்கு முருங்கை கீரை தீர்வளிக்கும்.
கர்ப்பப்பைக் கோளாறுகளை சரி செய்யும், ஆஸ்துமா, சளி போன்ற சுவாசக் கோளாறுகளுக்கும், மூட்டுவலி, உடல் வலி போன்ற பிரச்சனைகளுக்கு முருங்கை கீரை தீர்வளிக்கும்.
கடந்த காலங்களில் ராஜாக்களும், மன்னகர்களும், தங்கள் உடலை கட்டுக்கோப்பாக வைத்து பாதுகாத்துக்கொண்டார்கள். இதற்காக அவர்களுக்கு பெரிய உதவியாக இருந்தது முருங்கை கீரை தான். முருங்கை கீரையில் இருக்கும் ஊட்டச்சத்துக்கள் உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள உதவுகிறது.
Advertisment
முருங்கை கீரையில் வைட்டமின் ஏ, சி, ஈ, இரும்புச்சத்து, கால்சியம், புரதம், நார்ச்சத்து மற்றும் அத்தியாவசிய அமினோ அமிலங்கள் போன்ற பல ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இதனால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். இரத்த சோகையை சரிசெய்யும், கண் மற்றும் எலும்பு ஆரோக்கியத்திற்கு முருங்கை கீரை முக்கிய பயன்களை கொடுக்கிறது. இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த உதவும். சர்க்கரை அளவை சமநிலைப்படுத்த உதவுகிறது.
மேலும், உடலில் ஜீரண சக்தியை மேம்படுத்தவும், உடல் சூட்டைத் தணிக்கவும், குழந்தை பெற்ற தாய்மார்களுக்கு, தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்கவும், கர்ப்பப்பைக் கோளாறுகளை சரி செய்யும், ஆஸ்துமா, சளி போன்ற சுவாசக் கோளாறுகளுக்கும், மூட்டுவலி, உடல் வலி போன்ற பிரச்சனைகளுக்கு முருங்கை கீரை தீர்வளிக்கும்.
இந்த முருங்கை கீரை வைத்து பொறியல் எப்படி செய்வது என்பதை பார்ப்போமா?
Advertisment
Advertisements
தேவையான பொருட்கள்
முருங்கை கீரை – ஒரு கப்
எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்
கடுகு – ஒரு டீஸ்பூன்
சீரகம் – அரை டீஸ்பூன்
வரமிளகாய் – 2
கறிவேப்பிலை சிறிதளவு
வெங்காயம் – 1
தேங்காய் துருவல் – அரை கப்
காய்ந்த நிலக்கடலை – ஒரு டீஸ்பூன்
செய்முறை
முதலில், ஒரு கடாய் எடுத்துக்கொண்டு அதில், எண்ணெய், கடுகு, சீரகம், வரமிளகாய் சேர்த்து தாளிக்கவும். அதன்பிறகு நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து வதக்கி, உருவி சுத்தம் செய்து வைத்துள்ள முருங்கை கீரையை அதில் சேர்த்து வதக்கவும்.
அதன்பிறகு, சிறிது தண்ணீர் ஊற்ற முருங்கை கீரையை வேகவிட்டு, அதில் துருவிய தேங்காய், அல்லது அம்மியில் அரைத்த தேங்காய் மற்றும் காய்ந்த நிலக்கடலை சேர்த்து அரைத்து அந்த கலவையை கீரையில் சேர்த்து கிளறவும். சிறிது நேரம் பச்சை வாசனை போகும்வரை வதக்கி எடுத்தால் சுவையாக முருங்கை கீரை பொறியல் தயார்.