அலுவலகங்கள் செல்லும் நபர்கள், மற்றும் பள்ளி செல்லும் குழந்தைகள் என பலரும் மதிய உணவு எடுத்து செல்வார்கள். இப்படி இருப்பவர்களுக்கு தினகமும் ஒரே மாதிரியாக உணவை கொடுத்தால் அவர்களுக்கு சலிப்பை ஏற்படுத்தும். அதனால் தினமும் வித்தியாகமான உணவை கொடுக்க என்ன செய்யலாம் என்று யோசிப்பதே இல்லத்தரசிகளிக் முக்கிய யோசனையாக உள்ளது.
அந்த வரிசையில் நீங்களும், கணவர் மற்றும் குழந்தைகளுக்கு மதிய உணவு என்ன செய்யலாம் என்று யோசிப்பவரா? ஒருநாள் இந்த லஞ்ச்பாக்ஸ் ரெசிபியை செய்துகொடுத்து பாருங்கள். கேரளா ஸ்டைல் மலபார் முட்டை சோறு எப்படி செய்வது என்பதை பார்ப்போமா?
தேவையான பொருட்கள்:
வடித்த சாதம் – ஒரு கப்
முட்டை – 3
வெங்காயம் சிறியது – 10
பச்சை மிளகாய் – 1
பூண்டு – 4
சீரகம் – ஒரு டீஸ்பூன்
மிளகு – ஒரு டீஸ்பூன்
கொத்தமல்லி – சிறிதளவு
வரமிளகாய் – 1
செய்முறை:
முதலில் முட்டையை ஒரு பவுலில் உடைத்து ஊற்றி நன்றாக அடித்து எடுத்துக்கொள்ளவும். அதன்பிறகு ஒரு மிக்ஸி ஜாரில் வெங்காயம், பச்ரச மிளகாய், வரமிளகாய், பூண்டு, மிளகு, சீரகம், கொத்தமல்லி இலை சேர்த்து குறகுறப்பாக அரைத்துக்கொள்ளவும்.
அதன்பிறகு, ஒரு வானலில் சிறிதளவு எண்ணெய் விட்டு, அதில் முட்டையை பொறித்து எடுத்துக்கொள்ளவும். அதே வானலில் மீண்டும் சிறிதளவு எண்ணெய் விட்டு, அரைத்து வைத்துள்ள பேஸ்டை அதில் சேர்த்து கிளரவும்.
அதன்பிறகு முட்டை சேர்த்து கிளறி, வடித்த சாதத்தை அதனுடன் மிக்ஸ் செய்து தேவையான அளவு உப்பு சேர்த்தால், சுவையான மலபார் முட்டை சோறு ரெடி. நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.