/indian-express-tamil/media/media_files/2025/04/15/qhSp71qJ1CPWXm8GEalp.jpg)
பொதுவாக அசைவம் சாப்பிடுபவர்கள் செரிமானத்திற்காக இறுதியில் ரசம் சாப்பிடுவது வழக்கம். இந்த ரசத்தில் பல வகைகள் உண்டு. இதில் தக்காளி ரசம் எப்படி செய்வது என்பதை பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:
தக்காளி - 5
மிளகு - 1 தேக்கரண்டி
சீரகம்- 1 & 1/2 தேக்கரண்டி
கொத்தமல்லி - 1 தேக்கரண்டி
வெந்தயம் - 1/4 தேக்கரண்டி
கடலைப்பருப்பு- 1 தேக்கரண்டி
கடுகு- 1 தேக்கரண்டி
புளி - ஒரு நெல்லிக்காய் அளவு
சிவப்பு மிளகாய் - 2
பச்சை மிளகாய் - 2
பெருங்காயப்பொடி - ஒரு சிட்டிகை
வெல்லம் - ஒரு சிட்டிகை
பூண்டு - 10
உப்பு - தேவைக்கேற்ப
மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
கடலை எண்ணெய் – தேவைக்கேற்ப
செய்முறை:
முதலில் கடலைப்பருப்பு, மிளகு, சீரகம், வெந்தயம், கொத்தமல்லி, வரமிளகாய், ஆகியவற்றை நன்றாக வறுத்து அம்மியில் குறகுறப்பாக அறைத்து எடுத்துக்கொள்ளவும். அந்த கலவையுடன் பூண்டையும் சேர்த்து அரைத்துக்கொள்ளவும்.
அடுத்து ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி, அதில், தக்காளி மற்றும் புளியை சேர்த்து வேக வைக்கவும். தக்காளி வெந்து தோல் பிரிந்து வந்தவுடன், அதை புளியுடன் சேர்த்து நன்றாக கரைத்து எடுத்துக்கொள்ளவும்.
அடுத்து ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, எண்ணெய், கடுகு, வரமிளகாய், பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து பெருங்காயப்பொடி சேர்த்து தாளித்து, கரைத்து வைத்துள்ள தக்காளி கலவையை அதில் சேர்க்கவும்.
அடுத்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து, அதில் மஞ்சள் தூள் உப்பு சேர்க்க வேண்டும். அதன்பிறகு அம்மியில் அரைத்து வைத்துள்ள பொடியை சேர்த்து, கொதிக்க வைத்து நுறை கட்டியவுடன் அடுப்பை ஆப் செய்யவும்.
அதன்பிறகு ஒரு துண்டு வெல்லம் சேர்த்து கொத்தமல்லி இலை சேர்த்து இறக்கினால் சுவையான தக்காளி ரசம் தயார். நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.