கண்ணாடியை தூக்கி ஓரம் போடுங்க... இந்தப் பொடியை மட்டும் இப்படி சாப்பிடுங்க போதும்: டாக்டர் நித்யா
தற்போதைய காலக்கட்டத்தில் பள்ளி குழந்தைகளே பார்வை குறைபாடு காரணமாக கண்ணாடி அணியும் நிலை ஏற்பட்டுள்ளது, 2 வயது அல்லது 3 வயது குழந்தையாக இருந்தாலும், ஸ்கிரீன் அதிகமாக பார்க்கும்போது பார்வை குறைபாடு ஏற்படுகிறது.
தற்போதைய காலக்கட்டத்தில் பள்ளி குழந்தைகளே பார்வை குறைபாடு காரணமாக கண்ணாடி அணியும் நிலை ஏற்பட்டுள்ளது, 2 வயது அல்லது 3 வயது குழந்தையாக இருந்தாலும், ஸ்கிரீன் அதிகமாக பார்க்கும்போது பார்வை குறைபாடு ஏற்படுகிறது.
கண்களில் பார்வை குறைபாடு என்பது இப்போது அனைவரும் சந்திக்கும் முக்கிய பிரச்னைகளில் ஒன்றாக இருக்கிறது. குழந்தைகள் முதல் இளைஞர்கள் வரை அனைவருமே கண் பார்வை பாதிப்புகளை சந்தித்து வரும் நிலையில், கண்களுக்கு கண்ணாடி அணியும் வழக்கம் இருந்து வருகிறது. கொஞ்சம் வயதானவர்கள் தான் இந்த மாதிரி படிக்கும்போதோ அல்லது, தூரத்தில் இருக்கும் பொருளை பார்க்கும்போதோ பார்வை குறைபாடு ஏற்படும்.
Advertisment
தற்போதைய காலக்கட்டத்தில் பள்ளி குழந்தைகளே பார்வை குறைபாடு காரணமாக கண்ணாடி அணியும் நிலை ஏற்பட்டுள்ளது, 2 வயது அல்லது 3 வயது குழந்தையாக இருந்தாலும், ஸ்கிரீன் அதிகமாக பார்க்கும்போது பார்வை குறைபாடு ஏற்படுகிறது. இதனால் 3 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு மொபைல்போன் கொடுப்பதை தவிர்க்க வேண்டும். ஆனால் இப்போது குழந்தைகள் அனைவருமே சாதாரணமாக மொபைல்போன் பயன்படுத்துகிறார்கள்.
இப்படி மொபைல்போன் பயன்படுத்தும் குழந்தைகளுக்கு, கண்களின் நரம்புகள் பாதிக்கப்பட்டு, மூளையின் செயல்திறன் குறைவாகும். இதுபோன்று செயல்திறன் குறையும்போது கொஞ்சம் கொஞ்சமாக பார்வைத்திறன் குறையும். இதுபோன்ற பிரச்னை ஏற்படும்போது பின் மண்டடையில் வலி ஏற்படும். இந்த பிரச்னையை தவிர்க்க, எண்ணெய் குளியல் அவசியமாகும். சித்த மருத்துவத்தில் மூளிகைகளை எடுத்து தப்பளம் என்ற மெத்தேடில் குளிக்க வேண்டும்.
தப்பளம் மெத்தேடில் உள்ள மூலிகைகளை பசும்பாலில் கலந்து, தலையில் தேய்த்துக்கொண்டு, அடுத்த நாள் எண்ணெய் தேய்த்து குளிக்கும்போது கண்பார்வை குறைபாடு, கொஞ்சம் கொஞ்சமாக குணமாகும். தாண்டிரிக்காய், கீழைாநெல்லி, அதிமதுரம், சீரகம், நெல்லிக்காய் பொடி தேவை. இந்த 5 வகை மூலிகைகளின் பொடியை பாலில் கலந்து, தலையில் தேய்க்க வேண்டும். தலையில் தட்டி தட்டி தேய்ப்பதற்கு பெயர் தான் தப்பளம் என்று சொல்வார்கள்.
Advertisment
Advertisements
அதேபோல், கீழாநெல்லி தைலம், அருக்கன் தைலம், நொச்சி தைலம் ஆகியவற்றை பயன்படுத்தலாம். அதேபோல் கண்பார்வை அதிகரிக்க வெள்ளை கரிசலாங்கன்னி மிக முக்கியமானது. உடலில் ஏற்படும் பலவகையாக பிரச்னைகளை தீர்க்க இந்த வெள்ளை கரிசலாங்கன்னி பயன்படுகிறது. வெள்ளை கரிசலாங்கன்னி பொடி, ஓமம் பொடி, பெருங்காயப்பொடி எடுத்துக்கொண்டு, மாதுளை மனப்பாக்குடன் சேர்த்து தினமும் ஒரு ஸ்பூன் அளவு சாப்பிடும்போது கண்களின் பார்வை அதிகரிக்க தொடங்கும் என்று டாக்டர் நித்யா கூறியுள்ளார்.