ரசாயணம் கலந்த குளிர்பானங்களின் பயன்பாடு இளைஞர்கள் மத்தியில் அதிகரித்து வரும் இன்றைய காலக்கட்டத்தில் வாரத்திற்கு ஒருமுறையாவது ஆரோக்கியமான பானங்களை எடுத்துக்கொள்ள வேண்டும். அப்படி செய்யும்போது நமது உடல் ஆரோக்கியம் மேம்படும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். எலும்புகள் பலமாகவும், உடலில் ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்கவும் அதற்கு தகுந்தார்போல் உணவு பழக்கவழங்கங்களை மாற்றிக்கொள்ள வேண்டியது அவசியம்.
Advertisment
அதிகமான மூட்டு வலி, இடுப்பு வலி, இருந்தாலும், இரத்த அழுத்தம் சீரகவும், இதயம் ஆரோக்கியமாக செயல்படவும் இந்த குறிப்பிட்ட பானத்தை குடிப்பது நல்லது. இந்த பானம் தயாரிப்பது எப்படி என்பதை பார்ப்போமா?
தேவையான பொருட்கள்
ராகி மாவு – 2 டீஸ்பூன்
Advertisment
Advertisements
ஆப்பிள் – 1
தாமரை விதை – ஒரு பவுல்
பேரிட்சம் பழம் – 4
பால் – அரை டம்பளர்
செய்முறை
முதலில், ராகி மாவை எடுத்து ஒரு பவுலில் கரைத்துக்கொள்ள வேண்டும். அடுத்து, ஒரு பாத்திரத்த அடுப்பில் வைத்து, அதில் அரை லிட்டது தண்ணீர் ஊற்றி, கரைத்த ராகி மாவை அதில் சேர்த்து நன்றாக காய்ச்சவும்.
அதன்பிறகு ஒரு ஆப்பிலை எடுத்த உப்பு தண்ணீரில் நன்றாக கழுவிவிட்டு, துண்டு துண்டுகளாக நறுக்கி தனியாக வைத்துக்கொள்ளவும். தாமரை விதைகளை நன்றாக வறுத்து மிக்ஸியில் போட்டு அரைக்கவும்.
அரைத்த தாமரை விதைகளுடன், கொட்டை நீக்கிய பேரிட்சம் பழம், நறுக்கிய ஆப்பிள் பழம் ஆகியவற்றுடன், கெட்டியாக கிண்டிய ராகி கலவையை சேர்த்து, அதனுடன் பாலை சேர்த்து அரைக்கவும்.
இந்த கலவையை தனியாக ஒரு பவுலில் எடுத்துக்கொண்டு தேவைப்பட்டால் முந்திரி, பாதாம் பருப்புகளை துண்டு துண்டுகளாக நறுக்கி இதனுடன் சேர்த்து குடிக்கலாம். உடலுக்கு மிகுந்த ஆரோக்கியத்தை கொடுக்கும்.
இந்த பாணத்தை காலை அல்லது மதிய வேளையில் தயாரித்து குடிக்கலாம். இனிப்பு சுவைக்காக இதில் எதுவும் சேர்க்க தேவையில்லை. ஆப்பிள் மற்றும் பேரிட்சம் பழத்தில் இருக்கும் இனிப்பு சுவையே இதற்கு போதுமானதாக இருக்கும்.