பல மருத்துவப் பயன்களைக் கொண்ட ஒரு சிறிய காய் சுண்டைக்காய். ஆயுர்வேதம் மற்றும் சித்த மருத்துவத்தில் பரவலாகப் பயன்படுத்தப்படும் சுண்டைக்காயில், உள்ள நார்ச்சத்து மற்றும் சில சேர்மங்கள் செரிமானத்தை மேம்படுத்த உதவுகின்றன. இது வயிற்று அமிலங்களை சமநிலைப்படுத்தி, குடல் புண்கள் மற்றும் இரைப்பை அழற்சி போன்ற பிரச்சனைகளுக்கு நிவாரணம் அளிக்கும்.
மலச்சிக்கல், அஜீரணம், வாயுத் தொல்லை, வயிற்றுப் புழுக்கள் போன்றவற்றை சரி செய்ய உதவுகிறது. வற்றலாகவும் இதை பயன்படுத்துவது வழக்கம். சுண்டைக்காயில் இரும்புச்சத்து நிறைந்துள்ளது. இது இரத்த சிவப்பணுக்கள் உற்பத்தியை அதிகரித்து, இரத்த சோகையைத் தடுக்கவும், சிகிச்சையளிக்கவும் உதவுகிறது. இதில் வைட்டமின் சி மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. இவை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகின்றன.
இப்படி பல நன்மைகள் கொண்ட சுண்டைக்காயில் துவையல் செய்து சாப்பிட்டால் எப்படி இருக்கும்? சுண்டைக்காய் துவையல் எப்படி செய்வது என்பதை பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:
கடலைப்பருப்பு – ஒரு டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு – ஒரு டீஸ்பூன்
வரமிளகாய் – 7
கறிவேப்பிலை சிறிதளவு
தேங்காய் – ஒரு கப்
பூண்டு – 3 பல்
சுண்டைக்காய் – ஒரு கப்
புளி – ஒரு நெல்லிக்காய் அளவு
செய்முறை:
முதலில் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி, கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பை சேர்த்து வறுக்கவும். அதன்பிறகு இதில் வரமிளகாய், பூண்டு, கறிவேப்பிலை, தேங்காய் சேர்த்து வணக்கவும். இந்த பொருட்கள் நன்றாக வணங்கியதும் தனியாக எடுத்து வைத்துக்கொள்ளவும்.
அதே எண்ணெயில், சுண்டைக்காயை வறுத்து எடுத்துக்கொள்ள வேண்டும். ஏற்கனவே வறுத்த பொருளுடன் சுண்டைக்காய் சேர்த்து புளி சேர்த்து மிக்ஸியில் அரைத்து எடுத்தால் சுவையான சுண்டைக்காய் துவையல் தயார்.