/indian-express-tamil/media/media_files/2025/04/06/5iGeIgKr5IAiL9w7G8V1.jpg)
இன்றைய காலக்கட்டததில் இளைஞர்கள் முதல் முதியவர்கள் வரை அனைவரும் சந்திக்கும் முக்கிய பிரச்னை சர்க்கரை வியாதி. இந்த வியாதியால் பாதிக்கப்பட்டவர்கள், உணவில் கட்டப்பாடுடன் இருக்க வேண்டியது அவசியம். மேலும் என்னென்ன உணவுகளை சாப்பிட வேண்டும், எதை சாப்பிட கூடாது என்பதை தெளிவாக தெரிந்துகொள்வது நல்லது. சர்க்கரை நோயாளிகளுக்கு பாகற்காய் சிறந்த உணவு என்று சொல்வார்கள்.
சர்க்கரை நோயாளிகள், கசப்பான உணவு பொருட்களை அதிகம் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று சொல்வார்கள். இதற்காக பாகற்காய், உள்ளிட்ட காய்கறிகளை அதிகம் சாப்பிடுமாறு பரிந்துறை செய்வார்கள். ஆனால் சர்க்கரை நோயாளிகள், கசப்பான பொருட்களை விடவும், துவர்ப்பான பொருட்களையே அதிகம் சாப்பிட வேண்டும் என்று டாக்டர் நித்யா கூறியுள்ளார். துவர்ப்பு சுவை உடைய பொருட்களை சாப்பிட சாப்பி சர்க்கரையின் அளவு கட்டக்குள் வரும்.
கசப்பை விடவும் துவர்ப்பு தான் சர்க்கரையை கண்ட்ரோல் செய்யும். துவர்ப்பு அடுத்து கசப்பு சாப்பிடுவது நல்லது. சுண்டைக்காய், அத்தி பிஞ்சு, வாழைப்பூ ஆகிய துவர்ப்பான பொருட்களை எடுத்துக்கொள்ளலாம். இவற்றை சர்க்கரை நோயாளிகள் எடுத்துக்கொள்ளும்பொது நிச்சயமாக பலன் கிடைக்கும் என்று டாக்டர் நித்யா கூறியுள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.