/indian-express-tamil/media/media_files/2025/04/18/DcuGgc8lKyQPEu29gatk.jpg)
இன்றைய காலக்கட்டத்தில் இளைஞர்கள் முதல் முதியவர்கள் வரை அனைவரும் சந்திக்கும் முக்கிய பிரச்னை சர்க்கரை வியாதி. இந்த வியாதியால் பாதிக்கப்பட்டவர்கள், உணவில் கட்டப்பாடுடன் இருக்க வேண்டியது அவசியம். மேலும் என்னென்ன உணவுகளை சாப்பிட வேண்டும், எதை சாப்பிட கூடாது என்பதை தெளிவாக தெரிந்துகொள்வது நல்லது. சர்க்கரை நோயாளிகளுக்கு பாகற்காய் சிறந்த உணவு என்று சொல்வார்கள்.
இதோபோல் சர்க்கரை நோய்க்கு தீர்வு தரும் வகையில் பல மருத்துவ குறிப்புகள் உள்ளது. இதில் செலவே இல்லாமல், தீர்வு தரும் உணவு குறித்து டாக்டர் இளவரசி கூறியுள்ளார். பொதுவாக சர்க்கரை நோய் என்று வந்துவிட்டால், மாத்திரை சாப்பிட்டு, நடை பயணம் சென்று சர்க்கரையின் அளவை குறைக்கத்தான் பலரும் நினைக்கிறார்கள்.ஆனால் டைப் 2 சர்க்கரை நோயில், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு அதிகரிப்பது மட்டுமல்ல, இன்சுலின் பிரச்னையையும் சரி செய்ய வேண்டும்.
ரத்த சர்க்கரையின் அளவை குறைத்தால், சர்க்கரை அதிகரிப்பில் இருந்து தப்பிவிடலாம். ஆனால் இன்சுலின் அளவையும் சமநிலைபடுத்த வேண்டும். அதனால் நாம் எடுக்கும் மருத்துவ முறைகள், சர்க்கரையின் அளவு மற்றும் ரத்தத்தில் இருக்கும் அதிகமான இன்சுலின் அளவையும் குறைக்க வேண்டும். சர்க்கரையின் அளவை மட்டும் குறைத்தால், வபாழ்நாள் முழுவதும் மருத்து மாத்திரை சாப்பிட்டுக்கொண்டு தான் இருக்க வேண்டும். கிட்னி பிரச்னை, கண் பிரச்னை, கால்களில் காயம் உள்ளிட்ட பிரச்னைகளை சந்திக்க நேரிடும்.
சர்க்கரை தொடர்பான உணவுகள் பழங்கள் என அனைத்தையும் தவிர்க்க வேண்டும். இதில் தேனும் அடங்கும். கொய்யா காய், நெல்லிக்காய், அவகேடா, பெர்ரி, இந்த மாதிரி சுகர் குறைவாக உள்ள பழங்களை சாப்பிடலாம். அதேபோல் சர்க்கரை அளவு குறைய வேண்டும் என்றால் ஒரு நாளைக்கு 50 கிராம் அளவுக்கும் குறைவான மாவுச்சத்து தான் எடுக்க வேண்டும் என்று டாக்டர் இளவரசி கூறியுள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.