இன்றைய காலக்கட்டத்தில் இளைஞர்கள் பலரும் சந்திக்கும் முக்கிய பிரச்னைகளில் ஒன்று சிறுநீரக கற்கள். சிறுநீரகங்களில் உருவாகும் திடமான கனிம மற்றும் உப்புப் படிகங்கள் தான் சிறுநீரக கற்கள் என்று சொல்லப்படுகிறது. இவை மணல் துகள் முதல் கூழாங்கல் அளவு வரை என பல்வேறு அளவுகளில் இருக்கலாம். சிறுநீரகத்தில் இருக்கும் வரை இந்த கற்கல் எந்த வலியையும் ஏற்படுத்துவதில்லை. ஆனால், சிறுநீர்க் குழாய் வழியாக நகரும்போது தாங்க முடியாத வலியை ஏற்படுத்தும்.
Advertisment
சிறுநீரகத்தில் கற்கள் பாதிப்பு இருக்கும்போது, பொதுவாக முதுகின் கீழ் பகுதியில் அல்லது வயிற்றின் பக்கவாட்டில் ஆரம்பித்து, இடுப்பு வரை பரவும். வலி விட்டு விட்டு அல்லது நிலையானதாக இருக்கலாம். அதேபோல், சிறுநீர் இளஞ்சிவப்பு, சிவப்பு அல்லது பழுப்பு நிறத்தில் தோன்றலாம். சில சமயங்களில் நுண்ணோக்கியின் உதவியின்றி பார்க்க முடியாத அளவுக்கு சிறிய இரத்தக் கறைகள் இருக்கலாம். மேலும் சிறுநீர் கழிக்கும்போது எரிச்சல், வலி ஏற்படலாம்.
இந்த பாதிப்புகளை தொடக்கத்திலேயே கண்டறிந்து சரி செய்வது முக்கியமானது. அந்த வகையில், சிறுநீரக கற்கள் பாதிப்பை தடுப்பதற்கு இந்த ஒரு ஜூஸ் குடித்தால் போதும் என்று டாக்டர், ஷர்மிகா கூறியுள்ளார். அதில், சிறுநீரக கற்கள் பாதிப்பு இருப்பவர்கள், காலை உணவாக பழங்களை எடுத்துக்கொள்ள வேண்டும். அதிலும் குறிப்பாக நீர்ச்சத்தும், நார்ச்சத்தும் அதிகம் உள்ள பழங்களாக எடுத்துக்கொள்வது நல்லது. அந்த வகையில் தர்பூசணி, முலாம் பழம், ஆரஞ்சு, ஆப்பிள், இந்த மாதிரியான பழங்களை காலை உணவாக எடுத்துக்கொள்ளலாம்.
அதேபோல் சிறுநீரக கற்கள் பாதிப்பு இருப்பவர்கள், மதிய உணவில், பாகற்காய், வெண்டைக்காய், கோவக்காய், புடலங்காய், பீர்க்கங்காய், வெண் பூசணி, உள்ளிட்ட காய்கறிகளை எடுத்துக்கொள்ளலாம். அதேபோல் காலை 11 மணிக்கு வாழைத்தண்டு ஜூஸ், சுரைக்காய் ஜூஸ், வெண் பூசணி ஜூஸ் என தினமும் மாற்றி மாற்றி எடுத்துக்கொள்ளலாம். இதன் மூலம் சிறுநீரக கற்கள் பாதிப்பை குறைக்கலாம். அதேபோல் காலை 3.30 மணி முதல் 4.30 மணிக்குள் ரணக்கள்ளி இலையை ஒரு இலை எடுத்து மென்று முழுங்க வேண்டும் தண்ணீர் சேர்க்க கூடாது.
Advertisment
Advertisements
இதேமாதிரி 3 நாட்கள் செய்துவிட்டு, ஒரு மாதம் விட்டுவிடலாம். அடுத்து 3 நாட்கள் செய்துவிட்டு ஒரு மாதம் விட்டுவிடுவது என இப்படி தொடர்ந்து சாப்பிடலாம். இப்படி செய்தால், சிறுநீரக கற்கள் பாதிப்பு குறையும். கூடவே மெடிசன்ஸ் மற்றும் நல்ல உணவுகளை எடுத்துக்கொள்வது நல்லது என்று கூறியுள்ளார்.