/indian-express-tamil/media/media_files/2025/06/16/UoYpW13OThmOmHBXfBtG.jpg)
உடல் எடை அதிகரிப்பு என்பது இன்றைய காலக்கட்டத்தில் பலரும் சந்திக்கும் முக்கிய பிரச்னையாக இருக்கிறது. இதனை தடுக்கவும், ஏறிய உடல் எடையை குறைக்கவும், பல வழிகளில் முயற்சி செய்து வருகின்றனர். அந்த வகையில் உடல் எடையை குறைக்க என்ன மாதிரியாக உணவுகளை எடுத்துக்கொள்ளலாம் என்பது குறித்து டாக்டர் யோகவித்யா கூறியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், பொதுவாகச் சித்த மருத்துவத்தில் மந்தாரை வேர் என்ற ஒரு வேர் உள்ளது. இந்த வேரை நன்றாகப் பொடி செய்து வைத்துக்கொண்டு, அதைத் தினமும் காலையில் வெறும் வயிற்றில் கஷாயமாகக் காய்ச்சி அருந்தி வரலாம். இதை நீங்கள் தொடர்ந்து எடுத்து வந்தால், ஒரே வாரத்திலேயே உங்கள் எடையில் ஒரு சில மாற்றங்கள் தெரிவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன. நீங்களே உங்கள் எடையைச் சரிபார்த்து உறுதி செய்யலாம்.
அதேபோல, நீர் முள்ளி கஷாயமும் மிகவும் பயனுள்ளது. நீர் முள்ளி, நெரிஞ்சல் முள்ளி போன்றவற்றைச் சேர்த்து கஷாயம் செய்து அருந்தும்போது, அது உடலில் உள்ள அதிகப்படியான நீராக, கப நீராக அனைத்தையும் சிறுநீர் பெருக்கி நடவடிக்கையின் மூலம் வெளியேற்றிவிடும். இதனால் உங்களுக்கு உடலில் உள்ள அதிகப்படியான எடை குறையும்.
பப்பாளி காயை நன்றாகத் துருவி, அதை ஆவியில் வேகவைத்தோ அல்லது வேறு ஏதேனும் சாலட்டிலோ சேர்த்துக் கொள்ளலாம். அல்லது பொரியல் போலக்கூடச் செய்து உங்கள் உணவில் தவறாமல் சேர்த்து வரலாம். வெள்ளரிக்காயை நன்றாகத் துருவி, அதைத் தயிரில் கலந்து உங்கள் மதிய உணவில் தினமும் சேர்த்துக்கொள்ளுங்கள். வெள்ளரிக்காய்க்குப் பதிலாக, முள்ளங்கியையும் நன்றாகத் துருவி, அதையும் தயிரில் கலந்து உங்கள் உணவோடு சாப்பிட்டு வரலாம்.
இந்த உணவு முறைகளைப் பின்பற்றுவதோடு, மூன்று வேளை உணவு சாப்பிட்ட பிறகும் கொத்தமல்லி-சோம்பு கஷாயம் குடித்து வரவும். கொத்தமல்லி ) மற்றும் சோம்பு இரண்டையும் ஒன்றாகச் சேர்த்து நன்றாக அரைத்து வைத்துக்கொள்ளுங்கள். அதில் ஒரு டீஸ்பூன் எடுத்து நன்றாகக் கஷாயம் வைத்துக் காய்ச்சவும். இந்தக் கஷாயத்தை உணவு உண்ட பிறகு, கிரீன் டீக்குப் பதிலாகப் பருகி வரலாம் என கூறியுள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.