/indian-express-tamil/media/media_files/AxQpgTacPcCAwTIM5Pu1.jpg)
சிறுநீரகக் கற்களைக் கரைப்பது முதல், ஃபைப்ராய்டு கட்டிகளைக் குறைப்பது வரை, கொள்ளின் பயன்கள் ஏராளம். வாரத்திற்கு ஒருமுறை கொள்ளு ரசம் மற்றும் துவையலை உணவில் சேர்த்துக்கொண்டால், உடல் புத்துணர்ச்சி பெறுவதை நீங்களே உணரலாம். இந்தக் கொள்ளுத் துவையல் மற்றும் ரசத்தை எப்படிச் செய்வது என்று பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:
கொள்ளு: 200 கிராம்
காய்ந்த மிளகாய்: 5-6
தனியா: ¼ தேக்கரண்டி
மிளகு: ¼ தேக்கரண்டி
சீரகம்: ¼ தேக்கரண்டி
சின்ன வெங்காயம்: 20
பூண்டுப் பல்: 10
கொத்தமல்லி இலை, கறிவேப்பிலை: ஒரு கைப்பிடி
செய்முறை:
முதலில் 200 கிராம் கொள்ளை வேகவைத்து, அதில் இருந்து ரசத்திற்குத் தேவையான தண்ணீரை மட்டும் தனியே எடுத்துக்கொள்ளுங்கள். இப்போது, ஒரு வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி, காய்ந்த மிளகாய், தனியா, மிளகு, சீரகம் ஆகியவற்றை வதக்கவும்.
அதனுடன் சின்ன வெங்காயம், பூண்டு, கொத்தமல்லி இலை, கறிவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கவும். பிறகு, வேகவைத்த கொள்ளை இதனுடன் சேர்த்து நன்கு வதக்கி, சூடு ஆறியதும் மிக்ஸியில் போட்டு அரைத்து எடுத்தால் சுவையான கொள்ளுத் துவையல் தயார். இந்தத் துவையலை சாதத்துடன் பிசைந்து சாப்பிடும்போது, கொள்ளின் முழுமையான பலன்களையும் பெறலாம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.