கொத்தவரங்காயில் உள்ள கிளைக்கோ நியூட்ரியன்கள் இரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்த உதவுகின்றன. இதில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால், இரத்த சர்க்கரை அளவை மெதுவாக உயர்த்தி, நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் நல்லது. இதில் உள்ள நார்ச்சத்து மற்றும் பொட்டாசியம் சத்து இதயத்திற்கு நன்மை பயக்கிறது.
Advertisment
கெட்ட கொழுப்பின் அளவைக் குறைத்து, இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தி, இதய நோய்கள் வருவதற்கான வாய்ப்பைக் குறைக்கிறது. கொத்தவரங்காய் ஜூஸ் எடை குறய உதவுகிறது. கால்சியம் அதிகம் உள்ளதால் எலும்புகளை பலப்படுத்தவும். மேலும் கர்ப்பிணி பெண்கள் கர்ப்பமடைந்த நாளிலிருந்து வாரம் இரண்டு முறை எடுத்துக் கொள்ளலாம்.
கொத்தவரங்காய் நரம்பு மண்டலத்திற்கு பலம் அளிக்கிறது. மன அழுத்தத்தைக் குறைக்கவும் உதவும். கொத்தவரங்காய் ஜூஸ் எப்படி செய்வது என்று பார்ப்போம்.
Advertisment
Advertisements
தேவையான பொருட்கள்
கொத்தவரங்காய்
எலுமிச்சை சாறு
தேன்
செய்முறை
தேவையான அளவு கொத்தவரங்காயை எடுத்து நன்கு கழுவி பொடியாக நறுக்கி மிக்ஸி ஜாரில் சேர்த்து சிறிது தண்ணீர் சேர்த்து அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
பின்னர் அதில் மீண்டும் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி மைய அரைத்து எடுத்து வடிகட்டவும். வடிகட்டி எடுத்த சாரில் அரை எலுமிச்சம் பழம் சாறு, ஒரு டீஸ்பூன் தேன் கலந்து குடிக்கலாம்.குறிப்பாக இந்த ஜூஸ் நாட்டு மருந்து சாப்பிட்டு பத்தியத்தில் இருப்பவர்கள் எடுக்கக்கூடாது.