New Update
/indian-express-tamil/media/media_files/2025/04/12/Z0Pog7851m2JKq918rk5.jpg)
செம்பருத்தி பூவின் இதழ்களை மென்று சாப்பிடுவதன் மூலம் வயிற்றுப் புண் மற்றும் வாய்ப்புண் குணமாகும். இது சருமத்திற்கு பளபளப்பை அளிக்கிறது மற்றும் சரும நோய்களைக் குணப்படுத்த உதவுகிறது.
நமது அன்றாட வாழ்க்கையில் சாதாரணமாக நமக்கு கிடைக்கும் முக்கிய பொருள் செம்பருத்தி பூ. பெரும்பாலும் கிராமங்களில் உள்ள ஒவ்வொரு வீடுகளிலும் இந்த பூச்செடியை நாம் பார்க்கலாம். இந்த செம்பருத்தி பூ அழகுக்காக மட்டும் இல்லாமல், உடல் ஆரோக்கியத்திற்கும் குறிப்பாக உயர் ரத்த அழுத்தம், பெண்களுக்கு மாதவிடாய் சிக்கல் போன்ற பிரச்னைகளை தீர்க்கும் அருமருந்து தான் இந்த செம்பருத்தி.
செம்பருத்தி பூ உடலில் கொழுப்பின் அளவைக் குறைக்கவும், இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தவும் உதவுகிறது. இது இதய நோய்கள் வராமல் தடுக்க உதவுகிறது. இதில் இரும்புச்சத்து அதிகம் இருப்பதால், இரத்த சோகை நோய்க்கு நல்ல மருந்தாகிறது. இது சிறுநீரை நன்கு வெளியேற்றவும், உடலில் உள்ள நச்சுக்களை அகற்றவும் உதவுகிறது. சிறுநீர் பாதை நோய்த்தொற்றுகளுக்கும் இது நிவாரணம் அளிக்கிறது.
செம்பருத்தி பூ மாதவிடாய் சுழற்சியை சீராக்கவும், மாதவிடாய் காலங்களில் ஏற்படும் வலி மற்றும் அசௌகரியத்தைக் குறைக்கவும் உதவுகிறது. கருப்பை தொடர்பான நோய்களுக்கு இது சிறந்த மருந்தாகப் பயன்படுகிறது. சில பெண்களுக்கு கருத்தரிக்கவும் இது உதவுகிறது. செம்பருத்தி பூவின் இதழ்களை மென்று சாப்பிடுவதன் மூலம் வயிற்றுப் புண் மற்றும் வாய்ப்புண் குணமாகும். இது சருமத்திற்கு பளபளப்பை அளிக்கிறது மற்றும் சரும நோய்களைக் குணப்படுத்த உதவுகிறது.
செம்பருத்தி டீ குடிப்பதால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது. உடல் வெப்பத்தை தணித்து குளிர்ச்சியை அளிக்கிறது. இந்த செம்பருத்தி பூவில் டீ எப்படி போடுவது என்பதை பார்ப்போமா?
தேவையான பொருட்கள்
உலர்ந்த செம்பருத்தி இதழ்கள் - 1-2 தேக்கரண்டி (அல்லது 2-3 புதிய செம்பருத்தி பூக்கள்)
தண்ணீர் - 1 கப்
தேன் அல்லது சர்க்கரை
எலுமிச்சை சாறு – அரை பழம்
ஏலக்காய் - 2
செய்முறை
ஒரு பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி செம்பருத்தி இதழ்களை சேர்த்து, ஏலக்காய் சேர்த்து பாத்திரத்தை மூடி 5-10 நிமிடங்கள் வரை கொதிக்க வைக்கவும். தண்ணீர் கொதித்தவுடன், தேநீர் நன்றாக ஊறும் வரை விடவும். ஊறியதும் தேநீர் அடர் சிவப்பு நிறமாக மாறும்.
தேநீரை வடிகட்டி ஒரு கோப்பையில் ஊற்றவும். விரும்பினால், தேன் அல்லது சர்க்கரை சேர்த்து இனிப்பாக்கலாம். மேலும் சுவைக்காக சிறிது எலுமிச்சை சாறு சேர்த்தால் சுவையான செம்பருத்தி பூ டீ ரெடி.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.