/indian-express-tamil/media/media_files/2025/06/27/meera-krishnan-2025-06-27-21-05-38.jpg)
இன்றைய காலக்கட்டத்தில் இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சந்திக்கும் முக்கிய பிரச்னை உடல் எடை அதிகரிப்பு. இதன் காரணமாக பல நோய் தொற்றுகள் ஏற்படும் அபாயமும் உள்ளதால், உடல் எடையை குறைக்க பலரும் பல வழிகளில் முயற்சி செய்து வருகின்றனர். இன்றைய காலக்கட்டத்தில், மாறி வரும் உணவு பழக்கவழக்கங்களும் உடல் எடை அதிகரிப்புக்கு முக்கிய காரணமாக இருக்கிறது.
தேவைக்கு அதிகமாக உணவு உட்கொள்வது, குறிப்பாக கொழுப்பு மற்றும் சர்க்கரை நிறைந்த உணவுகளை சாப்பிடுவது உடல் எடை அதிகரிப்புக்கு காரணமாக இருக்கலாம். உடற்பயிற்சி இல்லாதது அல்லது அன்றாட வாழ்வில் போதிய அசைவுகள் இல்லாதது அதேபோல் குடும்பத்தில் உடல் பருமன் இருக்கும் வரலாறு இருந்தால், உங்களுக்கும் உடல் எடை அதிகரிக்கும் வாய்ப்பு அதிகம். மன அழுத்தம் தூக்கமின்மை இருந்தால், அவை பசி உணர்வை அதிகரித்து, கலோரிகள் அதிகம் உள்ள உணவுகளை நாடச் செய்யலாம். இதுவும் உடல் எடை அதிகரிப்புக்கு காரணம்.
உடல் எடை அதிகமாக இருப்பதால் அதனை குறைக்க பல வழிகள் இருக்கிறது. அந்த வகையில் இயற்கை முறையில் உடல் எடையை எவ்வாறு குறைக்கலாம் என்பது குறித்து நடிகை மீரா கிருஷ்ணன் டிப்ஸ் கொடுத்துள்ளார். சமீபத்தில் ஒரு யூடியூப் சேனலில் பேசிய அவர், இன்ஸ்டன்ட் ப்ளாக் காபியில், பட்டர் அல்லது நெய் சேர்த்து சாப்பிலாம் ஈரலுக்கு நல்லது. தோலுக்கும் பளபளப்பு கொடுக்கும். பாலிவுட் நடிகர்கள் பலரும் அவர்கள் நாள் தொடங்குவது நெய் சேர்த்த ப்ளாக் காபியுடன் தான் என்று கூறியுள்ளனர்.
எனக்கு பிளாக் காபியில் பட்டரை விடவும் நெய் சேர்த்து சாப்பிடத்தான் மிகவும் பிடிக்கும். சர்க்கரையுடன் நெய் சேர்த்து காபி குடிப்பது சரியில்லை. ஆனால் சர்க்கரை இல்லாமல் காபியுடன் நெய் சேர்த்து குடிப்பது எனக்கு மிகவும் பிடிக்கும். பாலை கொதிக்க வைத்து, காபி பவுடர் சேர்த்து எடுக்கும் முறையில் பால் இல்லாமல் தண்ணீர்கொதிக்க வைத்து அதில் காபி பவுடரை சேர்த்து எடுக்க வேண்டும். அதில் நெய் சேர்த்து குடிக்கலாம். பால் கொழுப்பு நிறைந்தது. செரிமானத்திற்கு தொல்லை கொடுக்கும்.
ரஜினி சார் சொன்னது போல் வெள்ளை பொருட்களை தவிர்க்க வேண்டும். அவர் உப்பு கூட சேர்த்துக்கொள்ள மாட்டார். ஆனால், நான் உப்பு தவிர மற்ற அனைத்தையும் தவிர்த்துவிட்டேன். பால், சுகர், சாதம், ரவை, கோதுமை, என பல பொருட்களை உணவில் தவிர்த்துவிட்டேன். இந்த முறையை பின்பற்றியபோது 3 மாதத்தில் 91 கிலோ இருந்த நான் இப்போது 71 கிலோவாக குறைந்திருக்கிறேன் என கூறியுள்ளார்.
மேலும், காலை 10 மணிக்கு காபியில் நெய் கலந்து குடித்துவிட்டு 12 மணிக்கு முட்டையில் வெள்ளை கரு வைத்து ஆம்லேட் செய்து சாப்பிடுவேன். எப்போவது ஒருமுறை ராகி களி மற்றும் தேங்காய் சட்னி சாப்பிடுவேன். அதன்பிறகு 2-3 மணிக்கு மதிய உணவு சாப்பிடுவேன். சாதம் குறைவாகவும் மற்ற உணவுகள் அதிகமாகவும் சாப்பிடுவேன். மாலையில் 6-6.30 மணிக்குள் இரவு உணவை முடித்துவிடுவேன். சாதத்தை தவிர்த்துவிட்டு பன்னீர் அல்லது தந்துரி சிக்கன் சாப்பிடுவேன். எந்த உணவு சாப்பிட்டாலும் கிரீன் டீ அல்லது ஹாட் வாட்டர் குடித்துவிடுவேன். அதனபிறகு 10 நிமிடங்கள் இருக்கும் இடத்திலேயே நடை பயிற்சி செய்து அன்றைய நாளை முடித்துவிடுவேன் என்று மீரா கிருஷ்ணன் கூறியுள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.