தேவையான பொருட்கள்
எண்ணெய்
பூண்டு
காய்ந்த மிளகாய்
தக்காளி
புளி உப்பு
கடுகு கருவேப்பிலை
செய்முறை
ஒரு குச்சியில் தேவையான தக்காளியை குத்தி நெருப்பில் வாட்டி மேல் உள்ள தோலை நீக்கி ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து கொள்ளவும்.
பின்னர் ஒரு காடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பூண்டு, காய்ந்த மிளகாய் சேர்த்து வதக்கவும். பின்னர் இதனையும் மிக்ஸி ஜாரில் சேர்த்து அதனுடன் சிறிது புளி, உப்பு போட்டு நன்கு மைய அரைத்து எடுக்கவும்.
பின்னர் மீண்டும் கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, கருவேப்பிலை போட்டு தாளித்து அதில் அரைத்து வைத்துள்ள தக்காளி தொக்கை சேர்த்து ஒரு கொதி விட்டு இறக்கவும்.
சூடான தோசை, இட்லியுடன் இதை சேர்த்து சாப்பிட்டால் அவ்வளவு சுவையாக இருக்கும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“