/indian-express-tamil/media/media_files/2025/07/28/mint-pickle-2025-07-28-23-34-27.jpg)
பெரும்பாலும் தோசை, இட்லி போன்ற டிஃபன் வகைகளுக்கு சட்னி அல்லது சாம்பார் தான் சைட்டிஷ்-ஆக இருக்கும். அதற்கு பதிலாக வேறு ஒரு சைட்டிஷ் தேடுபவர்களுக்கு இந்த புதினா ஊறுகாய் நல்ல காம்பினேஷனாக இருக்கும். இதனை எவ்வாறு சுவையாக செய்யலாம் என்று இந்த பதிவில் காணலாம்.
தேவையான பொருட்கள்:
கடுகு,
வெந்தயம்,
சீரகம்,
வரமிளகாய்,
மல்லி தூள்,
நல்லெண்ணெய்,
புளி,
கொத்தமல்லி,
புதினா,
உப்பு,
பூண்டு,
கறிவேப்பிலை,
மஞ்சள் தூள்,
மிளகாய் தூள் மற்றும்
பெருங்காய தூள்.
செய்முறை:
அடுப்பில் கடாய் வைத்து அதில் கடுகு, வெந்தயம், சீரகம் ஆகிய அனைத்தையும் சேர்த்து வறுக்க வேண்டும். இதில் இருந்து வாசனை வரும் வரை வறுத்த பின்னர், 10 வரமிளகாய் சேர்த்து மீண்டும் வறுக்கவும்.
இத்துடன் மல்லி தூள் சேர்த்து மிக்ஸியில் பொடியாக அரைக்க வேண்டும். இனி அடுப்பில் இருக்கும் கடாயில் நல்லெண்ணெய் ஊற்றவும். இதில், நெல்லிக்காய் அளவில் புளி, சுத்தம் செய்து வைத்த கொத்தமல்லி, புதினா சேர்த்து வதக்க வேண்டும்.
இவை அனைத்தும் சுருங்கும் வரை வதக்கிய பின்னர் அடுப்பில் இருந்து இறக்கி விடலாம். இனி, இவை ஆறியதும் தேவையான அளவு உப்பு சேர்த்து மிக்ஸியில் பசை பதத்திற்கு நன்கு அரைக்கவும்.
இப்போது, அடுப்பில் இருக்கும் கடாயில் மீண்டும் நல்லெண்ணெய் ஊற்றி சீரகம், கடுகு, பூண்டு, கறிவேப்பிலை மற்றும் முதலில் அரைத்த மசாலா பொடி சேர்த்து தாளிக்க வேண்டும். இதில் சிறிது மஞ்சள் தூள், மிளகாய் தூள், பெருங்காய தூள் ஆகியவற்றை சேர்த்துக் கொள்ளலாம்.
இறுதியாக, புதினா மற்றும் கொத்தமல்லி கலவையை இதில் சேர்த்து தாளித்து எடுத்தால் சுவையான புதினா ஊறுகாய் தயாராகி விடும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.