நாம் அன்றாடம் எடுத்துக் கொள்ளும் காய்கறியில் ஏராளமான மருத்துவ குணங்கள் அடங்கி இருக்கும். குறிப்பாக, புடலங்காயில் நரம்புகளை புத்துணர்ச்சியாக்கும் ஆற்றல் மற்றும் மலச்சிக்கலுக்கு தீர்வு அளிக்கும் தன்மை இருக்கிறது. அதன்படி, சுவையான புடலங்காய் பொரியல் எவ்வாறு செய்யலாம் என்று இந்த பதிவில் காணலாம்.
தேவையான பொருட்கள்:
புடலங்காய்,
எண்ணெய்,
கடுகு,
உளுத்தம் பருப்பு,
கறிவேப்பிலை,
உப்பு,
தண்ணீர்,
பூண்டு,
வரமிளகாய்,
சீரகம் மற்றும்
மஞ்சள் தூள்.
செய்முறை:
முதலில் புடலங்காயை சிறிய துண்டுகளாக நறுக்கி எடுத்துக் கொள்ள வேண்டும். இதன் பின்னர், அடுப்பில் கடாய் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி சூடுபடுத்த வேண்டும். இப்போது, கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும்.
இதன் பின்னர், நறுக்கி வைத்திருக்கும் புடலங்காய், தேவையான அளவு உப்பு, சிறிது தண்ணீர் சேர்த்து வேகவைக்க வேண்டும். இதனிடையே, பூண்டு, வரமிளகாய், சீரகம் சேர்த்து கொரகொரப்பாக அரைக்க வேண்டும்.
இதையடுத்து, நன்றாக வெந்த புடலங்காயில் அரைத்து வைத்த மசாலா, சிறிது மஞ்சள் தூள் மற்றும் எண்ணெய் சேர்த்து 5 நிமிடங்களுக்கு வதக்க வேண்டும். இவ்வாறு செய்தால் சுவையான புடலங்காய் பொரியல் தயாராகி விடும்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.