New Update
/indian-express-tamil/media/media_files/2025/06/30/sambar-recipe-2025-06-30-18-56-52.jpg)
பருப்பே இல்லாமல் டேஸ்டான சாம்பார் எவ்வாறு சிம்பிளாக செய்யலாம் என்று இந்த சமையல் குறிப்பில் பார்க்கலாம். இதன் சுவை எல்லோரும் விரும்பும் வகையில் இருக்கும்.
பருப்பே இல்லாமல் சாம்பார் வைக்க முடியுமா என்று எப்போதாவது சிந்தித்து இருக்கிறீர்களா? அப்படியென்றால் இந்த ரெசிபி உங்களுக்கு தான். எந்த பருப்பும் சேர்க்காமல் எப்படி சுவையாக சாம்பார் செய்யலாம் என்று பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:
வெங்காயம்,
தக்காளி,
பூண்டு,
பச்சை மிளகாய்,
மஞ்சள் தூள்,
சீரகம்,
பெருங்காயம்,
தண்ணீர்,
எண்ணெய்,
கடுகு,
உளுந்து,
கறிவேப்பிலை,
காய்ந்த மிளகாய்,
சாம்பார் பொடி,
உப்பு,
புளி,
கடலை மாவு,
கொத்தமல்லி இலை.
செய்முறை:
குக்கரில், பொடியாக நறுக்கிய வெங்காயம், தக்காளி, பூண்டு, பச்சை மிளகாய், மஞ்சள் தூள், சீரகம், பெருங்காயம் மற்றும் ஒரு கப் அளவிற்கு தண்ணீர் சேர்த்து இரண்டு விசில் வரும் வரை வேக வைக்க வேண்டும்.
இதையடுத்து, இதில் இருக்கும் தண்ணீரை வடிகட்டி அதனை நன்றாக மசிக்க வேண்டும். இப்போது, கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றிக் கொள்ளலாம். இதில் கடுகு, உளுந்து, சீரகம், கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய் சேர்த்து வறுக்க வேண்டும்.
இவை அனைத்தும் பொறிந்து வந்ததும், மசித்து வைத்திருக்கும் கலவையை இதில் சேர்த்து கலக்கலாம். மேலும், இதில் இரண்டு கப் அளவிற்கு தண்ணீர் சேர்த்துக் கொள்ளலாம். இத்துடன் இரண்டு டீஸ்பூன் சாம்பார் பொடி, உப்பு சேர்க்கவும். மேலும், தேவையான அளவு புளி கரசலை சேர்க்கலாம்.
இதனிடையே, இரண்டு டேபிள் ஸ்பூன் கடலை மாவை கட்டி இல்லாமல் தண்ணீரில் கரைத்து எடுக்க வேண்டும். இந்தக் கலவையை கொதிக்கும் சாம்பாரில் ஊற்றி நன்றாக கலக்க வேண்டும். சாம்பாரை இரண்டு நிமிடங்களுக்கு கொதிக்க விட்டு, அதில் கொத்தமல்லி இலைகள் தூவி எடுத்தால் சுவையாக இருக்கும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.