பருப்பு ஊற வைக்க, அரைக்க வேண்டாம்... எண்ணெய் குடிக்காத உளுந்த வடை; சிம்பிள் டிப்ஸ்!

பருப்பு இல்லாமல் எப்படி சுவையான வடை செய்யலாம் என்று இந்தப் பதிவில் காண்போம். இதன் சுவை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பும் வகையில் இருக்கும்.

பருப்பு இல்லாமல் எப்படி சுவையான வடை செய்யலாம் என்று இந்தப் பதிவில் காண்போம். இதன் சுவை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பும் வகையில் இருக்கும்.

author-image
WebDesk
New Update
Ulundha vadai recipe

பருப்பை ஊற வைக்காமல், அரைக்காமல் எவ்வாறு சுவையான உளுந்த வடை செய்யலாம் என்று இந்த சமையல் குறிப்பில் பார்க்கலாம். குறிப்பாக, இந்த வடை அதிகம் எண்ணெய் குடிக்காது என்பதால் ஆரோக்கியத்திற்கு பாதிப்பு கிடையாது.

Advertisment

தேவையான பொருட்கள்:

இட்லி மாவு,
மைதா,
அரிசி மாவு,
வெங்காயம்,
பச்சை மிளகாய்,
கறிவேப்பிலை,
சீரகம்,
உப்பு,
பேக்கிங் சோடா மற்றும்
எண்ணெய்

செய்முறை:

Advertisment
Advertisements

இரண்டு கப் அளவிற்கு இட்லி மாவை எடுத்துக் கொள்ள வேண்டும். அத்துடன் ஒரு ஸ்பூன் மைதா, அரிசி மாவு, பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, சீரகம், உப்பு மற்றும் பேக்கிங் சோடா சேர்த்து நன்றாக கலக்க வேண்டும்.

இந்த மாவு நன்றாக கெட்டியானதும் உளுந்து வடை வடிவத்திற்கு தட்டி எடுத்துக் கொள்ளவும். அதன் பின்னர், அடுப்பில் ஒரு கடாய் வைத்து அதில் எண்ணெய் ஊற்றிக் கொள்ளலாம். இந்த எண்ணெய் சூடான பின்னர், தட்டி வைத்திருக்கும் மாவை பொறித்து எடுத்தால் சுவையான வடை ரெடியாகி விடும்.

குறிப்பாக, பருப்பு ஊறை வைத்து, அதனை அரைத்து செய்ய வேண்டிய அவசியம் இல்லாத காரணத்தினால், இந்த டேஸ்டியான வடையை 10 நிமிடங்களில் செய்திட முடியும்.

recipe

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: