New Update
/indian-express-tamil/media/media_files/2025/07/05/sambar-recipe-2025-07-05-21-29-47.jpg)
சுவையான அரைச்சு விட்ட சாம்பார் எவ்வாறு ஈசியாக செய்யலாம் என்று இந்த சமையல் குறிப்பில் பார்க்கலாம். இதன் சுவை அனைவரும் விரும்பும் வகையில் அட்டகாசமாக இருக்கும்.
சைவ உணவுகளில் சாம்பாருக்கு தனி இடம் இருக்கிறது. எனினும், ஒவ்வொருவரும் தங்களுக்கு ஏற்ற ஸ்டைலில் வித்தியாசமாக சாம்பார் செய்வார்கள். அந்த வகையில், அரைச்சு விட்ட சாம்பார் எப்படி சுலபமாக செய்யலாம் என்று இதில் காணலாம்.
தேவையான பொருட்கள்:
முருங்கைக்காய் - 2,
தக்காளி - 1
குடைமிளகாய் - 1,
பச்சை மிளகாய் - 2,
துவரம் பருப்பு - அரை கப்,
மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்,
உப்பு - தேவையான அளவு,
பெருங்காயம் - அரை டீஸ்பூன்,
சாம்பார் பொடி - ஒன்றரை டேபிள் ஸ்பூன்,
புளி - சிறிதளவு,
தண்ணீர் - இரண்டு கப்
மசாலா பொருட்கள்:
வெந்தயம் - கால் டீஸ்பூன்,
காய்ந்த மிளகாய் - 2,
வெங்காயம் - 1,
மிளகுத் தூள் - அரை டீஸ்பூன்,
துருவிய தேங்காய் - கால் கப்,
கொத்தமல்லி விதைகள் - 2 டேபிள் ஸ்பூன்,
கடலை பருப்பு - இரண்டு டேபிள் ஸ்பூன்,
கறிவேப்பிலை - தேவையான அளவு
செய்முறை:
முதலில், துவரம் பருப்பை மஞ்சள் தூளுடன் சேர்த்து, பிரஷர் குக்கரில் 4-5 விசில் வரும் வரை நன்கு வேகவைத்து, மசித்து தனியே வைத்துக் கொள்ளவும்.
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி, அது சூடானதும் கடுகு, துவரம் பருப்பு, வெந்தயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்க்கவும். அதனுடன் நறுக்கிய முருங்கைக்காய், தக்காளி, குடைமிளகாய் ஆகியவற்றை வதக்கவும்
பின்னர் மஞ்சள் தூள், பெருங்காயம், உப்பு மற்றும் சாம்பார் தூள் சேர்த்து நன்கு கலந்து ஒரு நிமிடம் வைத்திருக்கவும். பிறகு புளி கரைசல் சேர்த்து கலந்து, மூடி போட்டு 8 நிமிடங்கள் வேக விடவும். காய்கறிகள் மென்மையாகும் வரை வேகவைக்க வேண்டும்.
இதனிடையே, அரச்சுவிட்ட சாம்பாருக்கான மசாலா பொருட்களை வறுத்து அரைக்க வேண்டும். ஒரு கடாயில் சிறிது எண்ணெய் விட்டு, காய்ந்த மிளகாய், கடலைப்பருப்பு, கொத்தமல்லி விதைகள், மிளகு, வெந்தயம், கறிவேப்பிலை ஆகியவற்றைச் சேர்த்து பொன்னிறமாக வறுக்கவும். வறுத்த பொருட்களை ஆறவைத்து, மிக்ஸி ஜாரில் சேர்க்கவும். அதனுடன் வெங்காயம் மற்றும் தேங்காய் சேர்த்து, சிறிதளவு தண்ணீர் விட்டு விழுதாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
இப்போது, வெந்த பருப்பு மற்றும் அரைத்து வைத்துள்ள மசாலா பொருட்களை சாம்பாருடன் சேர்த்து நன்கு கலக்க வேண்டும். இதனை 2-3 நிமிடங்கள் கொதிக்க விடவும். இறுதியாக, கொத்தமல்லி இலைகளைத் தூவி இறக்கினால் அரச்சுவிட்ட சாம்பார் தயாராகி விடும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.