இட்லி தோசைக்கு மாவு அரைப்பது என்பதே கடினமான வேலைதான். நிறைய பேருக்கு மாவு எப்படி அரைப்பது என்று தெரியாது. அப்படியே மாவு ஆட்டினாலும் இட்லி தோசை ஒழுங்காகவே வராது.
Advertisment
அப்படி இருப்பவர்கள் எல்லோரும் இனி இன்ஸ்டன்டாக தோசை மாவு செய்து தோசை சுட்டு சாப்பிடலாம். இந்த முறையை ஃப்ரிட்ஜ் இல்லாதவர்கள் கூட பயன்படுத்திக் கொள்ளலாம். ஈசியாக இன்ஸ்டன்ட் தோசை மாவு எப்படி அரைப்பது என்று ஷெரின் கிச்சன் யூடியூப் பக்கத்தில் கூறியிருப்பது பற்றி பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
சாப்பாட்டு அரிசி - 1 டம்ளர் உளுந்து - ஒரு கைப்பிடி தக்காளி -2 உப்பு, இஞ்சி மிளகாய் சீரகம்
Advertisment
Advertisements
செய்முறை
சாப்பாட்டு அரிசி ஒரு டம்ளர் ஒரு கைப்பிடி உளுந்து இரண்டையும் தண்ணீர் ஊற்றி நன்கு கழுவி விட்டு அரை மணி நேரம் ஊற வைக்கவும். இப்போது ஊறவைத்த அரிசியை தண்ணீர் இல்லாமல் எடுத்து மிக்ஸி ஜாரில் சேர்க்கவும் அதோடு தக்காளி, இஞ்சி, வர மிளகாய் சீரகம் சிறிது தண்ணீர் ஆகியவற்றை சேர்த்து நன்கு நைசாக அரைத்துக் கொள்ளவும்.
இதில் தேவையான அளவு உப்பு தண்ணீர் தேவைப்பட்டால் சேர்த்து தோசை மாவு பதத்திற்கு கரைத்துக் கொள்ளவும். அவ்வளவுதான் இதை அப்படியே எடுத்து எப்போதும் போல தோசை ஊற்றலாம். தோசை சுவையாகவும் இருக்கும். எப்போதும் போல இல்லாமல் இதன் சுவை கொஞ்சம் டிஃபரண்ட் ஆகவே இருக்கும் குழந்தைகள் கூட வேண்டாம் என்று சொல்லாமல் சாப்பிட்டு விடுவார்கள்.
எப்போதும் ஒரே மாதிரி தோசையா என்று சலித்துக் கொள்ளும் உங்கள் வீட்டில் இருப்பவர்களுக்கு இந்த மாதிரி தோசை செய்து கொடுங்கள்.
தோசைக்கு மாவு அரைக்க நேரமில்லாதபோது இன்ஸ்டண்ட் ஆக வெறும் 10 நிமிடத்தில் தோசை செய்து சாப்பிடலாம். அப்போ இந்த தோசையை ட்ரை பண்ணுங்கள். வெறும் 10 நிமிடம் போதும் சட்டுன்னு மாவு அரைத்து ஒரு க்ரிஸ்பியான தோசையை சுட்டு விடலாம்.
தோசை பிடிக்காதவர்கள் கூட இந்த தோசையை விரும்பி சாப்பிடுவார்கள். இந்த முறையை பின்பற்றி எல்லோருக்கும் பிடித்த தோசையை 10 நிமிடத்தில் செய்யலாம்.