முன்பெல்லாம், சமையல் நிகழ்ச்சிகளில் செய்து காண்பிக்கப்படும் ரெசிபிக்கள் மட்டும் தான் ஹிட்டடிக்கும். ஆனால், தற்போதைய சூழலில் சீரியல்களில் இடம்பெறும் சமையல் தான் பெரிதும் வைரல் ஆகிறது. அதன்படி, நிறைய பேருக்கு ஃபேவரட்டான கயல் சீரியலில் இடம்பெற்ற 'மா பால்' ரெசிபியை எப்படி சுலபமாக செய்யலாம் என்று இந்தக் குறிப்பில் காண்போம்.
தேவையான பொருட்கள்:
மாம்பழம்,
தேங்காய் பால்,
அரிசி மாவு,
நாட்டுச் சர்க்கரை மற்றும்
ஏலக்காய் பொடி
செய்முறை:
நன்றாக பழுத்த மாம்பழம் ஒன்றை எடுத்துக் கொள்ள வேண்டும். இதன் தோலை சீவி விட்டு, சிறிய துண்டுகளாக நறுக்கி எடுத்துக் கொள்ளலாம். இதன் பின்னர், ஒரு தேங்காயை சிறிய துண்டுகளாக வெட்டி எடுத்து, அவற்றை மிக்ஸியில் போட்டு அரைத்து வடிகட்டி தேங்காய் பால் எடுத்துக் கொள்ளவும்.
இனி அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து அதில் தேங்காய் பாலை ஊற்றி காய்க்க வேண்டும். இத்துடன் நறுக்கி வைத்திருந்த மாம்பழங்களை சேர்க்கலாம். மறுபுறம், சிறிதளவு அரிசி மாவை, தேங்காய் பாலுடன் கலந்து, அடுப்பில் இருக்கும் கலவையுடன் சேர்க்க வேண்டும்.
இவை, நன்றாக கொதிக்கும் போது ஒரு கப் நாட்டுச் சர்க்கரை சேர்த்து கிளற வேண்டும். இதன் நிறம் மாறியதும் ஒரு சிட்டிகை ஏலக்காய் பொடி சேர்க்கலாம். இந்தக் கலவை கெட்டியாக மாறும் போது, கூடுதலாக சிறிது தேங்காய் பால் சேர்த்து கலக்கலாம்.
இறுதியாக, சிறிய துண்டு மாம்பழங்களை இதில் தூவி எடுத்தால் சுவையான 'மா பால்' ரெசிபி தயாராகி விடும். இதன் சுவை அனைவருக்கும் பிடிக்கும் வகையில் இருக்கும்.