/tamil-ie/media/media_files/uploads/2023/08/kessa.jpg)
எங்க வீடுகளில் உடனடி ஸ்வீட் என்றால் கேசரிதான் முதல் சாய்ஸ். குறிப்பாக, அத்தை செய்யும் கேசரி சரியான இனிப்புடன், கச்சிதமான பதத்தில் அருமையாக இருக்கும். அதே சுவையில், பர்ஃபெக்ட்டான கேசரியை எப்படி செய்வது என்று சுபாஅம்மாவிலாக்ஸ் யூடியூப் பக்கத்தில் கூறியிருப்பது பற்றி இந்தப் பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
ரவை - 1 கப்
நெய் - 2 கரண்டி
ரைஸ் பிராண்ட் ஆயில் - 2 கரண்டி (அல்லது வேறு ஏதேனும் எண்ணெய்)
தண்ணீர் - 3 கப்
சர்க்கரை - 1 கப் (அல்லது தேவைக்கேற்ப)
கேசரி பவுடர் - சிறிதளவு (நிறத்திற்காக)
ஏலக்காய்த்தூள் - சிறிதளவு
உப்பு - ஒரு சிட்டிகை
முந்திரிப் பருப்பு - சிறிதளவு
திராட்சை - சிறிதளவு
செய்முறை
முதலில் ஒரு கடாயில் ஒரு கரண்டி நெய் மற்றும் ஒரு கரண்டி ரைஸ் பிராண்ட் ஆயில் சேர்த்து சூடாக்கவும். இதில் ஒரு கப் ரவையைச் சேர்த்து, பொன்னிறமாக வரும் வரை நன்கு வறுத்து தனியே எடுத்து வைத்துக் கொள்ளவும். ரவை நல்ல மணமாக வறுபடுவது முக்கியம்.
ஒரு கப் ரவைக்கு, அதே கப்பில் ஒரு கப் சர்க்கரை மற்றும் மூன்று கப் தண்ணீர் எடுத்து வைத்துக் கொள்ளவும். அதே கடாயில் மூன்று கப் தண்ணீரையும் சேர்த்து நன்கு சூடாக்கவும். தண்ணீர் கொதிக்கும்போது, சிறிதளவு கேசரி பவுடர் சேர்த்து, நிறத்திற்காகக் கலக்கவும். பின்னர், வறுத்து வைத்துள்ள ரவையை கொஞ்சம் கொஞ்சமாகச் சேர்த்து, கட்டி படாமல் கிளறிக்கொண்டே இருக்கவும். ரவை நன்கு வெந்து திக்கான பதம் வரும் வரை கிளறவும்.
ரவை நன்கு வெந்ததும், ஒரு கரண்டி நெய்யும், ஒரு கரண்டி ரைஸ் பிராண்ட் ஆயிலும் சேர்த்து நன்கு கலக்கவும். அடுப்பை குறைந்த தீயில் வைத்து, ஒரு கப் சர்க்கரையைச் சேர்த்து, சர்க்கரை முழுமையாகக் கரையும் வரை கிளறவும். இனிப்புத் தேவைப்பட்டால், சர்க்கரை அளவைச் சரிசெய்து கொள்ளலாம்.
இதனுடன் சிறிதளவு ஏலக்காய்த்தூள் மற்றும் ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து நன்கு கலக்கவும்.
கடைசி கட்டம்: இறுதியாக, நெய்யில் வறுத்த முந்திரிப் பருப்பு மற்றும் திராட்சையைச் சேர்த்து நன்கு கிளறினால், செம்ம டேஸ்டியான, சரியான பதத்தில் உள்ள கேசரி தயார். இந்த எளிய முறையில் நீங்களும் உங்கள் வீட்டில் சுவையான கேசரியைச் செய்து அசத்தலாம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.