மீந்துபோன இட்லி, முட்டை போதும்… சூப்பரான ஸ்நாக்ஸ் ரெடி; சிம்பிள் ரெசிபி
மீதமான இட்லி உடன் மூன்று முட்டை சேர்த்து சுவையான ஸ்நாக்ஸ் செய்வது எப்படி என்று இந்தக் குறிப்பில் பார்க்கலாம். இதன் சுவை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடிக்கும்.
மீதமான இட்லி உடன் மூன்று முட்டை சேர்த்து சுவையான ஸ்நாக்ஸ் செய்வது எப்படி என்று இந்தக் குறிப்பில் பார்க்கலாம். இதன் சுவை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடிக்கும்.
எளிதாக செரிமானம் ஆகி விடும் என்பதால் பலருக்கும் பிடித்தமான உணவாக இட்லி இருக்கிறது. எனினும், சில சமயங்களில் இட்லி மீதமாகும் போது அதனை சாப்பிட நிறைய பேர் ஆர்வம் காட்ட மாட்டார்கள்.
Advertisment
அது போன்ற நேரத்தில் இட்லி மற்றும் முட்டையை கொண்டு சுவையான ஸ்நாக்ஸ் ஒன்றை தயாரிக்கலாம். இதன் சுவை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்தமான வகையில் இருக்கும்.
தேவையான பொருட்கள்:
இட்லி, எண்ணெய், சோம்பு, வெங்காயம், கறிவேப்பிலை, பச்சை மிளகாய், தக்காளி, மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித்தூள், கரம் மசாலா, முட்டை மற்று கொத்தமல்லி
Advertisment
Advertisements
செய்முறை:
இட்லியை சிறிய துண்டுகளாக வெட்டி எடுத்துக் கொள்ள வேண்டும். இனி ஒரு கடாயில் இரண்டு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி அதில், கால் ஸ்பூன் சோம்பு, ஒரு பெரிய வெங்காயம், சிறிது கறிவேப்பிலை மற்றும் ஒரு பச்சை மிளகாயை சிறிய துண்டுகளாக நறுக்கி போட்டு வதக்க வேண்டும்.
வெங்காயத்தில் பச்சை வாசனை போகும் வரை வதக்கிய பின்னர், ஒரு தக்காளியை நறுக்கி போட்டு வதக்க வேண்டும். இதையடுத்து, சிறிதளவு மஞ்சள் தூள், கால் ஸ்பூன் மிளகாய் தூள், அரை ஸ்பூன் மல்லித்தூள், கரம் மசாலா ஆகியவை சேர்த்து கலக்க வேண்டும்.
இதன் பின்னர், மூன்று முட்டை மற்றும் வெட்டி வைத்த இட்லி சேர்த்து கலந்து கொள்ளலாம். இறுதியாக, தேவையான அளவு உப்பு, கொஞ்சமாக மல்லி இலைகள் சேர்க்கலாம். இவ்வாறு செய்தால் மீதனான இட்லியில் இருந்து சுவையான ஸ்நாக்ஸ் தயாராகி விடும்.