தண்ணி சேர்க்காமல் இப்படி மாவு அரைத்து... மொறு மொறு உளுந்த வடை இப்படி சுடுங்க; ஒண்ணு கூட மிச்சம் இருக்காது!
சுவையான உளுந்த வடை எப்படி செய்யலாம் என்று இந்த சமையல் குறிப்பில் பார்க்கலாம். இது மொறு மொறுவென்று இருப்பதால், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.
சுவையான உளுந்த வடை எப்படி செய்யலாம் என்று இந்த சமையல் குறிப்பில் பார்க்கலாம். இது மொறு மொறுவென்று இருப்பதால், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.
மாலை நேரத்தில் டீ அல்லது காபியுடன் சேர்த்து ஏதாவது ஸ்நாக்ஸ் சாப்பிட்டால் நன்றாக இருக்குமே என்று பலருக்கு தோன்றும். அந்த வகையில், உளுந்த வடை தான் பலருக்கும் விருப்பமானதாக இருக்கிறது. அதன்படி, மொறு மொறுப்பான உளுந்து வடை எவ்வாறு செய்யலாம் என்று இந்தப் பதிவில் பார்க்கலாம்.
Advertisment
தேவையான பொருட்கள்:
உளுந்து, இஞ்சி, பச்சை மிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லி, எண்ணெய் மற்றும் உப்பு.
செய்முறை:
Advertisment
Advertisements
ஒரு கப் உளுந்தை நன்றாக கழுவி விட்டு சுமார் ஒரு 1 மணி நேரம் ஊற வைக்க வேண்டும். இந்த உளுந்துடன் சிறிய துண்டு இஞ்சி, இரண்டு பச்சை மிளகாய்கள், சிறிதளவு கறிவேப்பிலை ஆகியவை சேர்த்து அரைக்க வேண்டும்.
இவ்வாறு முதல் முறை அரைக்கும் போது தண்ணீர் சேர்க்கக் கூடாது. அதன் பின்னர், சிறிது சிறிதாக தண்ணீர் விட்டு அரைத்து வெண்ணெய் பதத்திற்கு மாவை கொண்டு வர வேண்டும். இதையடுத்து, பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கொத்தமல்லி மற்றும் கறிவேப்பிலை சேர்த்து பிசைய வேண்டும். இறுதியாக, இதில் உப்பு சேர்க்க வேண்டும்.
இனி மாவை உளுந்த வடை வடிவத்தில் எடுத்து மிதமான சூட்டில் இருக்கும் எண்ணெய்யில் பொறித்து எடுக்க வேண்டும். இவ்வாறு செய்தால் சுவையான உளுந்த வடை தயாராகி விடும்.