/indian-express-tamil/media/media_files/2025/01/09/dM7A0xfgKvUMdLrRp3YY.jpg)
வெண்பொங்கல் என்பது ஒரு பிரபலமான, எளிமையான மற்றும் சுவையான உணவாகும். உங்கள் வெண்பொங்கலை மேலும் சிறப்பாக்க சில சமையல் குறிப்புகள் இங்கே. சுமாராக பொங்கல் செய்வேன் என்பவர்கள் கூட இந்த டிப்ஸ்களை ஃபாலோ செய்து சூப்பராக வெண்பொங்கல் செய்யலாம்.
பால் சேர்ப்பு: வழக்கமாக தண்ணீரில் பொங்கல் செய்வதற்குப் பதிலாக, ஒரு கப் பால் அல்லது தேங்காய்ப் பால் சேர்த்து சமைத்துப் பாருங்கள். இது பொங்கலுக்கு தனித்துவமான சுவையையும், மணத்தையும் கொடுக்கும்.
புதிதாகப் பொடித்த மசாலா: மிளகு மற்றும் சீரகத்தை முழுதாகப் போடுவதற்குப் பதிலாக, சற்று பொடித்துச் சேர்த்தால் பொங்கல் மேலும் வாசனையாக இருக்கும். இதனால் மசாலா வீணாகாது என்பதும் ஒரு கூடுதல் நன்மை.
இஞ்சிப் பொடி: இஞ்சியை துருவி வெயிலில் காயவைத்து, பொடித்து வைத்துக் கொள்ளுங்கள். பொங்கல் செய்யும்போது இந்த இஞ்சிப் பொடியைச் சேர்ப்பது பொங்கலுக்கு நல்ல மணத்தைத் தருவதுடன், செரிமானத்திற்கும் நல்லது.
புதுமையான சுவைக்கு: வழக்கமான மிளகு, சீரகத்திற்குப் பதிலாக, சீரகம் மற்றும் பச்சை மிளகாயை ஒன்றாக அரைத்துச் சேர்த்துப் பொங்கல் செய்தால், முற்றிலும் மாறுபட்ட மற்றும் சுவையான வெண்பொங்கலை நீங்கள் பெறலாம்.
தண்ணீர் அதிகமாகிவிட்டால்: பொங்கல் செய்யும்போது தவறுதலாக தண்ணீர் அதிகமாகிவிட்டதா? கவலை வேண்டாம்! சிறிதளவு ரவையை வறுத்து, பொங்கலுடன் சேர்த்துக் கிளறினால், பொங்கல் கெட்டியாகி சரியான பதத்திற்கு வரும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.