நாம் அனைவரும் சாலையோர தேநீர் கடைகளில் விரும்பி சாப்பிடும் மென்மையான, சுவையான பால் பன் ரெசிபி இங்கே. வீட்டில் சமைக்கப்பட்ட இந்த பன் மிகவும் மென்மையானது, கொஞ்சம் இனிமையானது மற்றும் சூடான டீ-க்கு நல்ல காம்பினேஷன்.
தேவையான பொருட்கள்:
2 கப் மைதா மாவு
1/2 டீஸ்பூன் ஈஸ்ட்
2 பின்ச் உப்பு
1/4 கப் சீனி பவுடர்
1 முட்டை
1/4 லிட்டர் பால்
செய்முறை:
முதலில், மைதா மாவு, ஈஸ்ட், உப்பு மற்றும் சீனி பவுடர் சேர்த்து நன்றாக கலக்கவும். பிறகு, முட்டை மற்றும் காய்ச்சி ஆற வைத்த பாலை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து பிசைந்து கொள்ளவும். மாவை 15 நிமிடம் ஊற வைக்கவும்.
ஊறிய மாவை மீண்டும் லேசாக பிசைந்து, சிறு சிறு துண்டுகளாக வெட்டி, உருண்டைகளாக உருட்டவும். உருண்டைகளை 10 நிமிடம் ஊற வைக்கவும்.
எண்ணெயை மிதமான சூட்டில் சூடாக்கி, உருண்டைகளை பொன்னிறமாக பொரித்து எடுக்கவும் . இப்போது சுவையான டீக்கடை குட்டி பண்ணு ரெடி! இந்த பண்ணை டீ டைமில் டீயில் முக்கி சாப்பிடலாம்.