மொறு மொறு கார வடை... டீ கடை ஸ்டைலில் இப்படி செஞ்சு சாப்பிடுங்க!

டீ கடைகளில் கிடைப்பது போல வீட்டிலேயே கார வடை செய்ய வேண்டுமா அப்போ இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க. சுவையாகவும் இருக்கும் சத்தானதாகவும் இருக்கும்.

டீ கடைகளில் கிடைப்பது போல வீட்டிலேயே கார வடை செய்ய வேண்டுமா அப்போ இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க. சுவையாகவும் இருக்கும் சத்தானதாகவும் இருக்கும்.

author-image
WebDesk
New Update
காரவடை காரவடை

மிகவும் பிரபலமான சிற்றுண்டிகளில் கார வடையும் ஒன்று. மொறுமொறுப்பான வெளிப்புறமும், மென்மையான உட்புறமும் கொண்ட இந்த வடை, மாலை நேர தேநீருடன் சேர்த்து சாப்பிட்டால் சுவையாக இருக்கும். சுவையான டீ கடை ஒரிஜினல் காரவடை எப்படி செய்வது என்று இந்தியன் ரெசிப்பீஸ் தமிழ் யூடியூப் பக்கத்தில் செய்து காட்டியிருப்பது பற்றி பார்ப்போம். 

Advertisment

தேவையான பொருட்கள்:

துவரம் பருப்பு - 1 கப்
உளுத்தம் பருப்பு - ¼ கப்
வெங்காயம் - 1  
இஞ்சி - 1 சிறிய துண்டு
கறிவேப்பிலை 
கொத்தமல்லி இலை 
பச்சை மிளகாய் - 1-2  
உப்பு - தேவையான அளவு
சோம்பு - 1 டீஸ்பூன்
அரிசி மாவு - 2 டேபிள்ஸ்பூன்
எண்ணெய்  

செய்முறை:

Advertisment
Advertisements

முதலில், ஒரு கப் துவரம் பருப்பை நன்கு கழுவி, சுத்தமான தண்ணீரில் மூன்று மணி நேரம் ஊற வைக்கவும். அதேபோல், கால் கப் உளுத்தம் பருப்பையும் தனியாக அதே அளவு நேரம் ஊற வைக்கவும். பருப்பு நன்றாக ஊறியவுடன், அவை மென்மையாகும்.

ஊறிய துவரம் பருப்பை மிக்ஸியில் அல்லது கிரைண்டரில் போட்டு, குறைந்த அளவு தண்ணீர் சேர்த்து மென்மையாக அரைத்துக் கொள்ளவும். அதேபோல், உளுத்தம் பருப்பையும் தனியாக மென்மையாக அரைக்கவும். இரண்டு மாவையும் ஒன்றாகக் கலக்கவும்.

அரைத்த பருப்பு கலவையில் பொடியாக நறுக்கிய வெங்காயம், இஞ்சி, கறிவேப்பிலை, கொத்தமல்லி இலை, பச்சை மிளகாய், தேவையான அளவு உப்பு, ஒரு டீஸ்பூன் சோம்பு மற்றும் இரண்டு டேபிள்ஸ்பூன் அரிசி மாவு சேர்க்கவும். அரிசி மாவு சேர்ப்பதால் வடை மொறுமொறுப்பாக வரும்.

சேர்த்த பொருட்கள் அனைத்தும் மாவுடன் நன்றாகக் கலக்கும்படி நன்கு பிசையவும். கலவை கெட்டியாகவும், அதே சமயம் இலகுவாகவும் இருக்க வேண்டும். அடுப்பில் எண்ணெயை சூடாக்கவும். எண்ணெய் நன்றாக காய்ந்ததும், பிசைந்த மாவை சிறிய உருண்டைகளாக எடுத்து, கையில் வைத்து தட்டி, நடுவில் ஒரு துளை போடவும். உங்களுக்கு வசதியான வடிவத்தில் வடைகளைத் தட்டலாம்.

தட்டிய வடைகளை சூடான எண்ணெயில் போட்டு, மிதமான தீயில் பொன்னிறமாக மாறும் வரை பொரிக்கவும். வடைகள் ஒரு பக்கம் வெந்ததும், மறுபக்கம் திருப்பிவிட்டு பொன்னிறமாகும் வரை வேகவிடவும்.

பொன்னிறமாக பொரித்த வடைகளை எண்ணெயில் இருந்து எடுத்து, டிஷ்யூ பேப்பரில் போடவும், இதனால் அதிகப்படியான எண்ணெய் உறிஞ்சப்படும். சுவையான கார வடைகள் இப்போது பரிமாறத் தயார். 

இந்த கார வடைகளை தேங்காய் சட்னி அல்லது சாம்பாருடன் பரிமாறினால் மிகவும் ருசியாக இருக்கும். மாலை நேர சிற்றுண்டியாகவோ அல்லது விருந்தினர்களுக்கு பரிமாறுவதற்கோ இது ஒரு சிறந்த தேர்வாகும்.  

Cooking Tips

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: