இனி ரோட்டு கடையில் கிடைக்கும் தஹி பூரியை சாப்பிடாமல் வீட்டிலேயே செய்யலாம். ரொம்பவும் ஈசிதான் பாஸ்.
தேவையான பொருட்கள்
பானி பூரி- 8
உருளைக்கிழங்கு- 5
சாட் மசாலா தூள்- தேவையான அளவு
வெங்காயம் – 1
உப்பு
தயிர்
தக்காளி
சிவப்பு மிளகாய் தூள்- ½ டீஸ்பூன்
சீரகத்தூள் – ½ டீஸ்பூன்
கொத்தமல்லி சட்னி, புளி சட்னி – தேவையான அளவு
செய்முறை :
உருளைகிழங்குகளை வேக வைத்து உரித்து வைத்து கொள்ளவும். புளி சட்னி செய்ய, ஒரு கிளாஸ் தண்ணீரில் புளி கலந்து கொள்ளவும். பின்னர் அதை கரைத்து வடிகட்டவும். அதில் பேரீச்சை பழம், ¼ கப் வெல்லம், அரை ஸ்பூன் மிளகாய் தூள், உப்பு சேர்த்து வேக வைக்கவும். நன்கு கொதி வந்ததும் அடுப்பை அனைத்து ஆறியவுடன் மிக்சியில் அரைத்து எடுத்து கொள்ளவும்.
இப்போது ஒரு பாத்திரத்தில் உருளைக்கிழங்கு எடுத்து நன்கு மசித்து அதனுடன், மிளகாய் தூள் , சீரக தூள், சாட் மாசலா, உப்பு, பொடியாக நறுக்கிய தக்காளி சேர்த்து கலந்து வைத்து கொள்ளவும். மற்றொரு பாத்திரத்தில் தயிர், உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும்.
தற்போது உருளைகிழங்கு, மசாலா, புளி சட்னி, கொத்தமல்லி சட்னி, நறுக்கிய வெங்காயம் எடுத்து அதன் மேல் தயிர் ஊற்றி, மிச்சர், நறுக்கிய கொத்தமல்லி ஆகியவற்றை சேர்க்கவும்.