நாம் தட்டையை கடையில்தான் வாங்கி சாப்பிவோம். ஆனால் இதை வீட்டிலேயே செய்ய முடியும்.
தேவையான பொருட்கள்
அரிசி மாவு
உளுந்த மாவு
கடலை மாவு
மிளகாய் பவுடர்
பொட்டுக்கடலை மாவு
பெருங்காயம்
வெண்ணை
சீரகம்
பொடியாக நறுக்கிய கருவேப்பிலை
உப்பு
செய்முறை :
அடுப்பில் கடாய் வைத்து அதில் அரிசி மாவு மற்றும் உளுந்த மாவு சேர்த்து வறுக்க வேண்டும். பின்பு சூடு ஆறியதும் அதில் கடலை மாவு, மிளகாய் தூள், பெருங்காயம், பொட்டுக்கடலை, உப்பு, வெண்ணை ஆகியவற்றை சேத்து கலக்கவும். தொடர்ந்து அதில் தண்ணீர் ஊற்றி மாவு பதத்திற்கு கொண்டு வர வேண்டும்.
மாவை சிறு உருண்டைகளாக இலையில் எண்ணெய் தடவி தட்டி, பொறிக்க வேண்டும். இதுபோல எல்லாவற்றையும் நாம் பொறித்து எடுத்தால் தட்டை ரெடி.