கோடை விடுமுறை விட்டாச்சு இனி பிள்ளைகள் எதாவது ஸ்நாக்ஸ் செய்து கொடுக்க சொல்லி கேட்க ஆரம்பித்து விடுவார்கள். தினமும் ஒரு ஸ்நாக்ஸ் செய்து கொடுக்க வேண்டிய நேரம் வந்து விட்டது. அதனால் இனி விதவிதமான ஸ்நாக்ஸ் செய்ய கற்றுக்கொள்ளுங்கள்.
Advertisment
அதுவும் பிள்ளைகளுக்கு ஹெல்தியாகவும் கடைகளில் கிடைப்பது போன்றும் செய்து கொடுக்க கற்றுக்கொள்ளுங்கள். கேக், முறுக்கு, ஜூஸ், பர்பி என பலவகையான் ஸ்நாக்ஸ் வகைகள் உள்ளது. அதை எல்லாம் செய்வதை விட பிள்ளைகளுக்கு பிடித்த மாதிரி செய்வது தான் டாஸ்க்.
இந்த சம்மர் ஸ்பெஷலாக குழந்தைகளுக்குப் பிடித்த காயின் தட்டை எப்படி செய்வது என்று டீக்கடை கிச்சன் யூடியூப் பக்கத்தில் செய்து காட்டிருப்பது பற்றி பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
Advertisment
Advertisements
அரிசி மாவு - 2 கப் உப்பு - ½ டீஸ்பூன் மிளகு - ½ டீஸ்பூன் சிரகம் - ½ டீஸ்பூன் பெருங்காயத்தூள் - ¼ டீஸ்பூன் மிளகாய் தூள் - 1 டீஸ்பூன் கருவேப்பிலை - சிறிதளவு மல்லி இலை - சிறிதளவு நிலக்கடலை பருப்பு - 100 கிராம் சூடான எண்ணெய் - 50 ml தண்ணீர் - 300 ml
செய்முறை
ஒரு பவுலில் அரிசி மாவுடன் மிளகு, சீரகம், பெருங்காயத்தூள், மிளகாய்த்தூள், கருவேப்பிலை, கொத்தமல்லி சேர்த்து கலக்கவும். அரைத்த வேர்க்கடலையைச் சேர்த்து, சூடான எண்ணெய் ஊற்றி கட்டியில்லாமல் பிசையவும்.
சிறிது சிறிதாக தண்ணீர் சேர்த்து கெட்டியான மாவாகப் பிசைந்து, சிறிய உருண்டைகளாக்கி மெல்லியதாக திரட்டவும். உங்களுக்கு விருப்பமான வடிவத்தில் வெட்டி, சூடான எண்ணெயில் பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்.
அவ்வளவு தான் மொறுமொறுப்பான, சுவையான தட்டை இப்போது தயார். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சுவைக்கும் இந்த தட்டை, மாலை நேர சிற்றுண்டியாகவோ அல்லது பண்டிகை பலகாரமாகவோ பரிமாறலாம்.