பாட்டி காலத்து பாரம்பரிய ரெசிபி... எண்ணெய் குடிக்காத தவலை வடை; இப்படி தட்டி எடுங்க!

டீக்கடைகளில் கிடைக்கும் தவலை வடையை வீட்டில் எப்படி செய்வது என்று பார்ப்போம். எண்ணெய் குடிக்காத வகையில் தவலை வடை எப்படி செய்வது என்று பார்ப்போம்.

டீக்கடைகளில் கிடைக்கும் தவலை வடையை வீட்டில் எப்படி செய்வது என்று பார்ப்போம். எண்ணெய் குடிக்காத வகையில் தவலை வடை எப்படி செய்வது என்று பார்ப்போம்.

author-image
WebDesk
New Update
vadai

தவலை வடை என்பது தென்னிந்தியாவில், குறிப்பாகத் தமிழ்நாட்டில் தயாரிக்கப்படும் ஒரு பாரம்பரிய மற்றும் ஆரோக்கியமான சிற்றுண்டியாகும். இது பொதுவாகக் காலை உணவாகவோ அல்லது மாலை நேரச் சிற்றுண்டியாகவோ பரிமாறப்படுகிறது.  

Advertisment

இதனை ஆரோக்கியமான முறையில் எண்ணெய் குடிக்காமல் எப்படி செய்வது என்று ட்ரடிஷனலிமாடர்ன்ஃபுட் இன்ஸ்டா பக்கத்தில் கூறியிருப்பது பற்றி பார்ப்போம்.

தேவையான பொருட்கள்:

பச்சரிசி
துவரம்பருப்பு
கடலைப்பருப்பு
பாசிப்பயறு
காய்ந்த மிளகாய்
கறிவேப்பிலை
சீரகம்
பெருங்காயம்
உப்பு
தேங்காய் 
வெங்காயம்
கொத்தமல்லி
எண்ணெய் 

Advertisment
Advertisements

செய்முறை:

பச்சரிசி மற்றும் பருப்பு வகைகளைத் தனித்தனியாக 2-3 மணி நேரம் ஊறவைக்கவும். ஊறிய பிறகு, அரிசி மற்றும் பருப்பை காய்ந்த மிளகாயுடன் சேர்த்து, கெட்டியாக அரைக்கவும். தேவைப்பட்டால் சிறிதளவு தண்ணீர் சேர்த்துக் கொள்ளலாம். 

அரைத்த மாவுடன் நறுக்கிய வெங்காயம், கொத்தமல்லி, கறிவேப்பிலை, சீரகம், பெருங்காயம், உப்பு மற்றும் துருவிய தேங்காய் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். 

மாவு கெட்டியாக இருக்க வேண்டும். அதை சிறு சிறு அடைகளாகத் தட்டி, நடுவில் ஒரு சிறு துளை இடலாம். வடையின் பாரம்பரிய வடிவம் தவளையின் கால் போல இருப்பதால் 'தவலை வடை' எனப் பெயர் பெற்றது. இதனை இலை இல்லை, எண்ணெய் தடவிய பேப்பரின் மீது தட்டி போடாலாம். 

ஒரு கடாயில் எண்ணெய் சூடாக்கி, மிதமான தீயில் அடைகளை இருபுறமும் பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும். தவலை வடை சூடாக, தேங்காய் சட்னி அல்லது சாம்பாருடன் பரிமாற மிகவும் சுவையாக இருக்கும். சாம்பாரில் ஊறவைத்து கூட சாப்பிடலாம். 

இது எளிமையான செய்முறையைக் கொண்டிருந்தாலும், அதன் தனித்துவமான சுவை காரணமாக மிகவும் பிரபலமான ஒரு தின்பண்டமாகும். இது டீக்கடைகளில் தான் நல்ல சுவையில் அதிகம் கிடைக்கும். ஆனால் இந்த மாதிரி இனி வீட்டிலேயே செய்யலாம்.  

தவலை வடை சூடாக, தேங்காய் சட்னி அல்லது சாம்பாருடன் சேர்த்து சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும். சில நேரங்களில் இதை சாம்பாரில் கூட போட்டு சாப்பிடலாம். 

Food Cooking Tips

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: