வழக்கம்போல் இட்லி செய்யாமல், திணை இட்லியை செய்து பாருங்கள். இந்நிலையில் இந்த வழிமுறைகளை கடைபிடிக்கவும்.
தேவையான பொருட்கள்
திணை- 1 கப்
இட்லி அரிசி -1 கப்
உளுந்து- 1\2 கப்
வெந்தயம்- 1\4 தேக்கரண்டி
உப்பு
செய்முறை:
அரிசி, திணை, பருப்பு ஆகியவற்றை சுத்தம் செய்து. திணை, அரிசி பருப்பு, வெந்தயம் 2 மணிநேரம் வரை ஊற வைக்கவும்.முதலில் பருப்பு, வெந்தயத்தை பேஸ்ட்டாக அரைத்துக் கொள்ளவும். வேறொரு பாத்திரத்திற்கு நகர்த்தவும்.பிறகு அரிசி, திணை கலவையை அரைத்து, அதையும் அதே பாத்திரத்திற்கு நகர்த்தவும். உப்பு சேர்த்து, நன்கு கலக்கவும். புளிப்பதற்கு அப்படியே விட்டு விடவும் பிறகு மாவு பொங்கியிருக்கும். நீளமான கரண்டியில் நன்கு கலக்கவும்.இட்லி பாத்திரத்தில் எண்ணெய் பூசி, மாவை ஊற்றி, ஆவியில் வேக வைக்கவும்.