சளி, இருமல் போன்ற பிரச்சனைகளால் அவதிப்படுபவர்களுக்கு தூதுவளைக் கீரை ஒரு சிறந்த தீர்வாகும். மருத்துவ குணங்கள் நிறைந்த இந்த கீரையை வைத்து, சுவையான மற்றும் சத்தான துவையல் எப்படி செய்வது என்று பார்ப்போம். சளியை முற்றிலும் விரட்டக்கூடிய இந்த தூதுவளை துவையலை செய்து ருசித்து மகிழுங்கள்.
தேவையான பொருட்கள்:
தூதுவளைக் கீரை - 1 கப்,
வரமிளகாய் - 3
புளி - சிறிதளவு
வெங்காயம் - 1
கடுகு,
உளுந்தம் பருப்பு,
பெருங்காயத் தூள்,
எண்ணெய் மற்றும்
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
ஒரு கடாயை அடுப்பில் வைத்து, சிறிதளவு எண்ணெய் சேர்க்கவும். எண்ணெய் காய்ந்ததும், வரமிளகாய், வெங்காயம், புளி ஆகியவற்றைச் சேர்த்து நன்றாக வதக்கவும். வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும், தூதுவளைக் கீரையை சேர்த்து, கீரை சுருங்கும் வரை வதக்கவும்.
கீரையை வதக்கிய இந்த கலவையுடன், தேவையான அளவு உப்பு சேர்த்து, ஆறவிடவும். இந்தக் கலவை ஆறியதும், மிக்ஸியில் சேர்த்து கெட்டியாக அரைத்து எடுக்கவும். இறுதியாக, ஒரு சிறிய கடாயில் சிறிதளவு எண்ணெய் விட்டு, கடுகு, உளுந்தம் பருப்பு, பெருங்காயத்தூள் சேர்த்து தாளித்து, அரைத்து வைத்துள்ள துவையலில் சேர்க்கவும்.
இப்போது, சத்தான மற்றும் சுவையான தூதுவளை துவையல் தயாராகி விட்டது. இதை சாதம், இட்லி, தோசை போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிடலாம். இந்தத் துவையல் சளிக்கு நல்ல நிவாரணம் அளிப்பதுடன், உடலுக்கும் பலம் சேர்க்கும்.