நம் முன்னோர்கள் கூறிய சில விஷயங்களில் முக்கியமான ஒன்று துளசி. இந்த துளசியின் பயன்களை நாம் அப்படியே மறந்துவிட்டோம். இந்நிலையில் இந்த துளசியின் நன்மைகளை குறித்து நாம் மறந்த சில விஷயங்களை பற்றிய தொகுப்புத்தான் இது.
துளசியிலேயே ராம துளசி, கிருஷ்ண துளசி என்று இரண்டு வகை இருக்கிறது. இந்நிலையில் இதுதொடர்பாக சென்னை அப்பலோ மருத்துவமனையின் டயட்டீஷியன் மருத்துவர் பிரியங்கா கூறுகையில் “ ராம துளசி மத வழிபாடுகளுக்கு பயன்படுகிறது. இதற்கு மருத்துவ பயன்களும் இருக்கிறது. இதன் இலைகளுக்கு இனிப்பு சுவை இருக்கிறது.
இந்நிலையில் காய்ச்சல், தோல் வியாதி, ஜீரணம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்குகிறது. துளசி தண்ணீர் உடல் எடை குறைப்பதற்கு உதவுகிறது. கெட்ட சுவாசம் இருந்தால் துளசியை பயன்படுத்துவது நல்லது. இதுபோலவே ஜீரணத்திற்கு இது உதவுகிறது. பதற்றம் மற்றும் மன அழுத்தம் ஆகியவற்றுக்கு மருந்தாக அமையும். உயர் ரத்த அழுத்தத்தை குறைக்க உதவுகிறது. இதில் இருக்கும் ஆண்டி ஆகஸிடண்ட் சத்து சர்க்கரை நோயாளிகளுக்கு சிறந்த மருந்தாக செயல்படுகிறது.