புளிப்புச் சுவைக்கு சற்று அமிலத்தன்மை இருக்கும். செரிமானத்தை சீரமைத்தல், கழிவுகளை அகற்றுவது, செரிமான சத்துகளை அந்தந்த இடங்களில் சேர்ப்பதற்கு இவை பயன்படுகின்றன என்று மருத்துவர் செல்வா சண்முகம் தெரிவித்துள்ளார். மேலும், பல தகவல்களை டாக்டர் விகடன் யூடியூப் சேனலில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Advertisment
எனினும், புளிப்புச் சுவை அதிகரிக்கும் போது அவை எரிச்சலை உருவாக்கக் கூடும். மேலும், வயிறு மற்றும் குடல் பகுதியில் அழற்சியை இவை ஏற்படுத்தலாம் என்று மருத்துவர் செல்வா சண்முகம் கூறுகிறார். இதனை நீண்ட நாட்களுக்கு கவனிக்காமல் இருந்தால் வயிற்றுப்போக்கு உருவாகும் என்று அவர் எச்சரிக்கை விடுக்கிறார்.
இதேபோல், உப்புச் சுவை அதிகரிக்கும் போது, பிரஷர், படபடப்பு மற்றும் மயக்கம் போன்றவை ஏற்படும். இதயம் சார்ந்த நோய்கள் மற்றும் சிறுநீரக செயல்பாட்டில் கோளாறு போன்றவையும் ஏற்படும். மேலும், அல்சர் பாதிப்புகளை உருவாக்கும் தன்மை கார சுவைக்கு இருக்கிறது.
இந்த சூழலில் கசப்பு மற்றும் துவர்ப்பு சுவையை பெரும்பாலானவர்கள் விரும்பி சாப்பிடுவதில்லை என்று மருத்துவர் செல்வா சண்முகம் கூறுகிறார். ஆனால், இரத்தத்தை விருத்தியாக்கும் ஆற்றல் துவர்ப்பு சுவைக்கு இருக்கிறது என்று அவர் தெரிவித்துள்ளார். நரம்புகளை பலப்படுத்தும் ஆற்றல் கசப்பு சுவைக்கு இருக்கிறது.
Advertisment
Advertisements
குறிப்பாக, சர்க்கரை நோயாளிகள் வெந்தயத்தை சாப்பிடலாம் என்று மருத்துவர் செல்வா சண்முகம் அறிவுறுத்துகிறார். இதற்காக வெந்தயத்தை ஊறவைத்து முளைகட்டி எடுத்துக் கொள்ள வேண்டும். இதனை காலை உணவுக்கு முன்னர் அரை ஸ்பூன் அளவிற்கு எடுத்துக் கொள்ளலாம் என்று அவர் பரிந்துரைக்கிறார்.
இதனை நம்முடைய உடல் ஏற்றுக் கொண்ட பின்னர், ஒரு கைப்பிடி அளவிற்கு கூட சாப்பிடலாம் என்று அவர் தெரிவித்துள்ளார். எனவே, சரியான முறையில் இதனை பயன்படுத்துவதன் மூலம் சர்க்கரை நோயின் தாக்கத்தை கட்டுப்படுத்த முடியும் என்று அறிய முடிகிறது.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.