/indian-express-tamil/media/media_files/2025/06/07/cdVVMFC9Ncd2iYPElHxU.jpg)
தென்னிந்தியாவின் பாரம்பரிய உணவுகளில் இட்லிக்கு ஒரு தனி இடம் உண்டு. காலை உணவாகவும், இரவு உணவாகவும் இட்லியை எடுத்துக் கொள்ள பெரும்பாலானவர்கள் விரும்புகின்றனர். அந்த வகையில், மிருதுவான இட்லியை எப்படி செய்வது என்று மெட்ராஸ் சமையல் யூடியூப் சேனலில் குறிப்பிட்டுள்ளனர். அதனை இப்பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
உளுந்து - 1 கப்
வெந்தயம் - 4 அல்லது 5
ஜவ்வரிசி - அரை கப்
இட்லி அரிசி - 4 கப்
உப்பு - தேவையான அளவு
தண்ணீர் - தேவையான அளவு
செய்முறை:
உளுந்து, வெந்தயம், இட்லி அரிசி மற்றும் ஜவ்வரிசியை நன்கு கழுவ வேண்டும். இவற்றை சுமார் 5 மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்கவும். இவ்வாறு ஊறிய பிறகு, தண்ணீரை வடிகட்டி, இவற்றை மிக்ஸியில் போட்டு, சிறிது தண்ணீர் சேர்த்து மென்மையான பதத்திற்கு மாவாக அரைக்க வேண்டும்.
இந்த மாவில் உப்பு சேர்த்து கைகளால் நன்றாக கலக்கவும். இப்போது, மாவை ஒரு பெரிய பாத்திரத்தில் மாற்றிக் கொள்ளலாம். இப்பாத்திரத்தை அப்படியே மூடி வைத்து சுமார் 8 மணி நேரங்களுக்கு புளிக்க விட வேண்டும். இவ்வாறு செய்யும் போது இட்லி மிருதுவாக இருக்கும்.
இனி, இட்லி தட்டில் சிறிது எண்ணெய் தடவி அதில் மாவை ஊற்றலாம். இதனை சுமார் 10 முதல் 12 நிமிடங்களுக்கு வேக வைத்து எடுத்தால் சாஃப்டான இட்லி ரெடியாகி விடும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.