/indian-express-tamil/media/media_files/2025/05/10/ocMuX2m8qbg2I8m882pB.jpg)
Tirupati Temple Prasadam Pulihora Recipe
திருப்பதி என்றாலே நம் நினைவுக்கு வருவது ஏழுமலையான் தரிசனமும், அந்தப் பிரசாதங்களின் மணமும்தான். அதில் மிகவும் சிறப்பான இடத்தைப் பிடிப்பது திருப்பதி புளியோதரை. வெறும் உணவு மட்டுமல்ல இது; பக்தர்களின் பக்திப் பயணத்தின் ஒரு இனிமையான நினைவாகவும், ஏழுமலையானின் அருளாசியாகவும் கருதப்படுகிறது.
திருப்பதி புளியோதரையின் சுவையை வீட்டிலும் பெற முடியும். அதற்குத் தேவையான பொருட்கள் மற்றும் செய்முறை இதோ:
தேவையான பொருட்கள்:
சாதம் - 2 கப் (உதிரியாக வடித்தது)
புளிக்கரைசல் - 1/2 கப் (புளியை ஊறவைத்து வடிகட்டியது)
நல்லெண்ணெய் - 4 தேக்கரண்டி
கடுகு - 1 தேக்கரண்டி
உளுத்தம்பருப்பு - 1 தேக்கரண்டி
கடலைப்பருப்பு - 1 தேக்கரண்டி
வேர்க்கடலை - 2 தேக்கரண்டி
காய்ந்த மிளகாய் - 2-3 (கிள்ளியது)
மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
பெருங்காயம் - ஒரு சிட்டிகை
வெல்லம் - 1/2 தேக்கரண்டி (விரும்பினால்)
உப்பு - தேவையான அளவு
கறிவேப்பிலை - ஒரு கொத்து
கொத்தமல்லி - சிறிதளவு (அலங்கரிக்க)
செய்முறை:
ஒரு கடாயில் நல்லெண்ணெய் ஊற்றி சூடாக்கவும்.
கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு மற்றும் வேர்க்கடலை சேர்த்து பொன்னிறமாக வறுக்கவும்.
காய்ந்த மிளகாய் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
மஞ்சள் தூள் மற்றும் பெருங்காயம் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும்.
புளிக்கரைசலை ஊற்றி, தேவையான அளவு உப்பு மற்றும் வெல்லம் சேர்த்து கொதிக்க விடவும்.
புளிக்கரைசல் சுண்டி, எண்ணெய் பிரிய ஆரம்பிக்கும் வரை கொதிக்க விடவும். இந்த கலவையை "புளி காய்ச்சல்" என்று கூறுவார்கள்.
வடித்த சாதத்தை ஒரு அகலமான பாத்திரத்தில் போட்டு, தயாராக வைத்துள்ள புளி காய்ச்சலை சிறிது சிறிதாக சேர்த்து கிளறவும். சாதம் முழுவதிலும் புளி காய்ச்சல் நன்றாகக் கலக்க வேண்டும்.
சுவை பார்த்து, தேவைப்பட்டால் உப்பு சேர்க்கவும்.
கொத்தமல்லி தழை தூவி அலங்கரிக்கவும்.
சுவையான திருப்பதி புளியோதரை தயார்!
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.