/indian-express-tamil/media/media_files/2024/11/20/dpNJ7MRztZqwyxhkDB4K.jpg)
தோசை என்பது தென்னிந்தியாவின் பிரபலமான உணவு வகைகளில் ஒன்றாகும். வழக்கமான தோசையை விட சற்று மாறுபட்டு, தக்காளியின் புளிப்பு மற்றும் சுவையான தன்மையுடன் தக்காளி தோசை தயாரிக்கப்படுகிறது. காலை உணவாகவோ அல்லது மாலை நேர சிற்றுண்டியாகவோ இதை செய்து சாப்பிடலாம். அப்படிப்பட்ட தக்காளி தோசையை எப்படி செய்வது என்று நியூஃபேங்க்லேண்ட் யூடியூப் பக்கத்தில் கூறியிருப்பது பற்றி பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:
இட்லி அரிசி
பச்சரிசி
உளுந்து
தக்காளி
காய்ந்த மிளகாய்
சீரகம்
வெங்காயம்
கறிவேப்பிலை
கொத்தமல்லி தழை
உப்பு
எண்ணெய்
செய்முறை:
இட்லி அரிசி, பச்சரிசி, உளுந்து ஆகியவற்றை தனித்தனியே 2-3 முறை கழுவி, குறைந்தது 4-5 மணி நேரம் ஊறவைக்கவும். ஊறிய அரிசி மற்றும் உளுந்தை வடிகட்டி, மிக்ஸி ஜாரில் சேர்க்கவும். அதனுடன் நறுக்கிய தக்காளி, காய்ந்த மிளகாய், சீரகம் சேர்த்து, சிறிது தண்ணீர் தெளித்து, தோசை மாவு பதத்திற்கு அரைக்கவும்.
மாவுடன் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கலக்கவும். இந்த மாவை புளிக்க வைக்க வேண்டிய அவசியமில்லை, உடனே தோசை சுடலாம். ஒரு கடாயில் சிறிது எண்ணெய் விட்டு, நறுக்கிய வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
வதக்கிய வெங்காயத்தை மாவுடன் சேர்த்து நன்கு கலக்கவும். தோசை கல்லை சூடாக்கி, சிறிது எண்ணெய் தடவி, ஒரு கரண்டி மாவை ஊற்றி வட்டமாக பரப்பவும். சுற்றிலும் சிறிது எண்ணெய் விட்டு, ஒருபுறம் வெந்ததும் திருப்பி போட்டு மறுபுறமும் வேக விடவும்.
மொறுமொறுப்பான தக்காளி தோசை தயார். தக்காளி தோசையை பொதுவாக தேங்காய் சட்னி, கார சட்னி அல்லது சாம்பாருடன் பரிமாறலாம். இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி உண்ணும் ஒரு ஆரோக்கியமான மற்றும் சுவையான உணவு ஆகும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.