டேஸ்டுக்கு பஞ்சமில்லை... தக்காளி வச்சு மொறு மொறு முறுக்கு; இப்படி செஞ்சு ருசிங்க!
தக்காளியை பயன்படுத்தி சுவையான முறுக்கு எப்படி செய்யலாம் என்று இந்தப் பதிவில் பார்க்கலாம். இது செய்வதற்கு எளிதாக இருப்பது மட்டுமின்றி எல்லோரும் விரும்பும் வகையிலும் இருக்கும்.
தக்காளியை பயன்படுத்தி சுவையான முறுக்கு எப்படி செய்யலாம் என்று இந்தப் பதிவில் பார்க்கலாம். இது செய்வதற்கு எளிதாக இருப்பது மட்டுமின்றி எல்லோரும் விரும்பும் வகையிலும் இருக்கும்.
தக்காளியை கொண்டு ஜூஸ், பொறியல் போன்று பல ரெசிபிகளை செய்து பார்த்திருப்போம். அதன்படி, இன்று அதே தக்காளியை கொண்டு ருசியான முறுக்கு செய்வது எப்படி என காணலாம்.
Advertisment
தேவையான பொருட்கள்:
தக்காளி, பூண்டு, மிளகாய் தூள், அரிசி மாவு, கடலை மாவு, உப்பு, பெருங்காயத்தூள், சீரகம், ஓமம் மற்றும் சன்ஃபிளவர் ஆயில்
செய்முறை:
Advertisment
Advertisements
மூன்று தக்காளிகளை எடுத்து அதன் தண்டு பகுதிகளை மட்டும் நீக்கிவிட வேண்டும். இனி அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து அதில் தண்ணீர் நிரப்பி, இந்த தக்காளிகளை வைத்து வேகவைக்க வேண்டும். இந்த தக்காளியின் தோலை உறித்து எடுக்கும் அளவிற்கு வெந்ததும், அதனை வெளியே எடுத்து விடலாம்.
அதன் பின்னர், வேக வைத்த தக்காளி, மூன்று பல் பூண்டு, ஒரு டீஸ்பூன் தனி மிளகாய் தூள் ஆகிய அனைத்தையும் மிக்ஸியில் சேர்த்து அரைக்க வேண்டும். இதனை ஒரு ஓரமாக வைத்து விடலாம். ஒரு பாத்திரத்தில் ஒன்றரை கப் அரிசி மாவு, ஒன்றரை கப் கடலை மாவு, அரை டீஸ்பூன் உப்பு, கால் டீஸ்பூன் பெருங்காயத்தூள், அரை ஸ்பூன் சீரகம், கால் ஸ்பூன் ஓமம் ஆகியவற்றை சேர்த்து கலக்க வேண்டும்.
இதையடுத்து ஒரு டேபிள் ஸ்பூன் சன்ஃபிளவர் ஆயில் சேர்த்து பிசைய வேண்டும். அதன் பின்னர், அரைத்து வைத்திருக்கும் தக்காளி கலவையை இதில் சேர்த்து கலந்து பிசைய வேண்டும். இவ்வாறு செய்தால் முறுக்கு மாவு தயாராகி விடும்.
இந்த மாவை எண்ணெய்யில் சுமார் 10 நிமிடங்கள் பொறித்து எடுத்தால் சுவையான தக்காளி முறுக்கு ரெடியாகி விடும். இதன் சுவை எல்லோரும் விரும்பும் வகையில் இருக்கும்.