வீட்டில தக்காளி நிறைய இருந்தது அப்படின்னா இந்த மாதிரி தக்காளி ஊறுகாய் ட்ரை பண்ணி பாருங்க. ஒரு வருடம் ஆனாலும் கெட்டுப் போகாத மாதிரி தக்காளி ஊறுகாய் செய்வது பற்றி குக் வித் சங்கீதா யூடியூப் பக்கத்தில் கூறியிருப்பது பற்றி பார்ப்போம்.
Advertisment
இந்த மாதிரி தக்காளி ஊறுகாய் செஞ்சி அதை பிசினஸ் மாதிரியும் செய்யலாம் கெட்டுப் போகாம அவ்வளவு சூப்பரா இருக்கும்.
தேவையான பொருட்கள்
புளி தக்காளி கடுகு சீரகம் வெந்தயம் பெருங்காயம் கருவேப்பிலை காய்ந்த மிளகாய் கல் உப்பு பூண்டு பச்சை மிளகாய் மஞ்சள் தூள் நாட்டுச்சர்க்கரை எண்ணெய்
Advertisment
Advertisements
செய்முறை
புளியை எடுத்து முதலில் சுடுதண்ணீரில் ஊற வைத்துக் கொள்ளவும். பின்னர் தக்காளியை எடுத்து மேல் உள்ள அந்த பச்சை காம்பை நீக்கிவிட்டு அறுத்துக் கொள்ளவும்.
பின்னர் ஒரு கடாயில் கடுகு, சீரகம், வெந்தயம், பெருங்காயம், கருவேப்பிலை ஆகியவற்றை மிதமான சூட்டில் சிவக்க வறுத்துக் கொள்ளவும்.
பின்னர் இதே கடாயில் சிறிது எண்ணெய் சேர்த்து நறுக்கி வைத்துள்ள தக்காளி மற்றும் ஊற வைத்துள்ள புளி, காய்ந்த மிளகாய், கல் உப்பு, சிறிதாக நறுக்கிய பூண்டு ஆகியவற்றை சேர்த்து ஒரு முறை கிளறி மூடி போட்டு வேக வைக்கவும்.
நன்கு வெந்ததும் தக்காளியின் மேல் உள்ள தோலை நீக்கி பின்னர் அனைத்து தோல்களையும் ஒரு இடுக்கி வைத்து எடுத்து வேக விடவும். பின்னர் வறுத்து வைத்துள்ள மசாலாவை அரைத்து தனியாக எடுத்துக் கொள்ளவும்.
வதக்கிய தக்காளியை ஆறவைத்து இதனையும் அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, பூண்டு, கருவேப்பிலை, காய்ந்த மிளகாய், பச்சை மிளகாய், மஞ்சள் தூள் ஆகியவற்றை எண்ணெயில் வறுத்துக் கொள்ளவும்.
அடுத்ததாக அடுப்பை மிதமான சூட்டில் வைத்து இதில் மிளகாய் தூள் சேர்த்து அதில் அரைத்து வைத்துள்ள தக்காளி பேஸ்டையும் சேர்த்து கலந்து விடவும். எண்ணெய் பிரிந்து வரும் வரை கொதிக்க விடவும். அடுத்து நாம் அரைத்து வைத்துள்ள அனைத்து பொடியையும் இதில் சேர்த்துக் கொள்ளவும்.
எண்ணெய் நன்கு பிரிந்து வரும் வரை கிளறிவிட்டு சிறிய துண்டு நாட்டு சர்க்கரையையும் சேர்த்து கிளறி விடவும். நன்கு சுண்டி எண்ணெய் பிரிந்து வந்ததும் இதை எடுத்து ஆற வைத்து கைப்படாமல் ஒரு கண்ணாடி பாட்டிலில் வைத்துக் கொள்ளலாம். தேவையான போது சுடு சாதத்திற்கு போட்டு கிளறி சாப்பிடலாம் சுவையாக இருக்கும்.