குழம்பு செய்ய நேரம் இல்லாத போது சுடுசாதத்துடன் பிசைந்து சாப்பிடக்கூடிய வகையில் தக்காளி வைத்து சுவையான தக்காளி ஊறுகாய் செய்வது எப்படி என்று பார்க்கலாம். இது சாதம், தோசை, இட்லி என அனைத்துடனும் அருமையாகப் பொருந்தும்.
தேவையான பொருட்கள்:
தக்காளி - 1/4 கிலோ
சிவப்பு மிளகாய் தூள் - 1/4 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்
புளி - நெல்லிக்காய் அளவு
பூண்டு - 5 பல்
வெந்தயம் - ஒரு டீஸ்பூன்
கடுகு - ஒரு டீஸ்பூன்
நல்லெண்ணெய் - 2 டீஸ்பூன்
உப்பு
கறிவேப்பிலை
காய்ந்த மிளகாய் - 5
பெருங்காயத்தூள்
செய்முறை:
தக்காளியை நன்கு கழுவி தனியே வைக்கவும். ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி சூடாக்கி, அதில் புளியைப் போட்டு நன்கு கரைத்து வடிகட்டி தனியே வைத்துக் கொள்ளவும். ஒரு கடாயை அடுப்பில் வைத்து, வெந்தயத்தைச் சேர்த்து பொன்னிறமாக வறுத்து எடுக்கவும். அதேபோல, கடுகையும் தனியாக வறுத்து எடுக்கவும். வறுத்த இந்த இரண்டையும் மிக்ஸியில் சேர்த்து நன்கு பொடித்து, மசாலாப் பொடியாக தனியே வைக்கவும்.
அதே கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும், பெருங்காயத்தூள் சேர்த்து, நறுக்கிய தக்காளியை போட்டு சுமார் 5 நிமிடங்கள் நன்கு வதக்கவும். வதக்கிய தக்காளி கலவையுடன், ஏற்கனவே தயார் செய்து வைத்துள்ள புளிக்கரைசலைச் சேர்த்து, தக்காளி நன்கு குழைந்து புளியுடன் சேரும் வரை கொதிக்க விடவும்.
கொதித்த தக்காளி மற்றும் புளிக் கலவையை அடுப்பிலிருந்து இறக்கி ஆறவிடவும். ஆறியதும், இந்தக் கலவையை மிக்ஸி ஜாரில் போட்டு, நைசாக அரைத்து எடுக்கவும். அரைத்த கலவையை ஒரு பாத்திரத்திற்கு மாற்றி, அதில் உப்பு, மஞ்சள் தூள், சிவப்பு மிளகாய் தூள், மற்றும் பொடித்து வைத்துள்ள மசாலாப் பொடி ஆகியவற்றைச் சேர்த்து நன்கு கலக்கவும்.
ஒரு வாணலியில் மீதமுள்ள எண்ணெயை ஊற்றி சூடாக்கவும். எண்ணெய் காய்ந்ததும், கடுகு சேர்த்து தாளிக்கவும். கடுகு வெடித்ததும், கறிவேப்பிலை மற்றும் கிள்ளிய காய்ந்த மிளகாயைச் சேர்க்கவும். பிறகு, உரித்த பூண்டு பற்களைச் சேர்த்து, பூண்டு பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
வதக்கிய தாளிப்புடன், அரைத்து வைத்துள்ள தக்காளி-புளிக் கலவையைச் சேர்த்து, குறைந்த தீயில் 10 நிமிடங்கள் நன்கு சுண்ட விடவும். எண்ணெய் பிரிந்து வரும் வரை கிளறவும். நன்கு சுண்டியதும் அடுப்பை அணைத்து ஆறவிடவும். ஆறிய பிறகு, காற்றுப்புகாத ஜாடியில் சேமித்து வைக்கலாம். இந்த சூப்பரான தக்காளி ஊறுகாயை ஃபிரிட்ஜில் வைத்தும் பல நாட்கள் பயன்படுத்தலாம்.