என் கணவருக்கு ரொம்ப பிடித்த கூட்டு... வெறும் 10 நிமிசம் போதும்: அனிதா குப்புசாமி ரெசிபி
தக்காளி கூட்டு எவ்வாறு விரைவாகவும், சுவையாகவும் செய்யலாம் என்று அனிதா குப்புசாமி தெரிவித்துள்ளார். குறிப்பாக, இந்த தக்காளி கூட்டு செய்வதற்கு 10 நிமிடங்கள் மட்டுமே ஆகும்.
தக்காளி கூட்டு எவ்வாறு விரைவாகவும், சுவையாகவும் செய்யலாம் என்று அனிதா குப்புசாமி தெரிவித்துள்ளார். குறிப்பாக, இந்த தக்காளி கூட்டு செய்வதற்கு 10 நிமிடங்கள் மட்டுமே ஆகும்.
பெரும்பாலும் தக்காளி கொண்டு இட்லி, தோசைக்கு ஏற்ற வகையில் சட்னி செய்திருப்போம். ஆனால், சாதம், சப்பாத்தி போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிடும் வகையில் தக்காளி கூட்டு எப்படி தயாரிக்கலாம் என்று அனிதா குப்புசாமி தெரிவித்துள்ளார்.
Advertisment
இந்த தக்காளி கூட்டு செய்வதற்கான ரெசிபியை தனது யூடியூப் சேனலில் அவர் பதிவிட்டுள்ளார். அதனை இக்குறிப்பில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
நாட்டு தக்காளி - 8, சின்ன வெங்காயம் - 20, பூண்டு - 15, பச்சை மிளகாய் - 2, சிவப்பு மிளகாய் - 2, உளுந்தம் பருப்பு - ஒரு டீஸ்பூன், கொத்தமல்லி இலை - ஒரு டேபிள் ஸ்பூன், கடுகு - முக்கால் டேபிள் ஸ்பூன், சீரகம் - முக்கால் டீஸ்பூன், மிளகாய் தூள் - 1 டீஸ்பூன், மஞ்சள் தூள் - அரை டீஸ்பூன், எண்ணெய் - தேவையான அளவு, உப்பு - தேவையான அளவு மற்றும் கறிவேப்பிலை.
Advertisment
Advertisements
செய்முறை:
தக்காளி, சின்ன வெங்காயம், பூண்டு மற்றும் மிளகாய்கள் அனைத்தையும் நீளவாக்கில் நறுக்கிக் கொள்ள வேண்டும். அடுப்பில் கடாய் வைத்து அதில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றிக் கொள்ள வேண்டும்.
இதில், உளுந்தம் பருப்பு, கடுகு, சீரகம், மிளகாய், சின்ன வெங்காயம், பூண்டு ஆகிய அனைத்தையும் சேர்த்து கலக்க வேண்டும். இவை சற்று வதங்கியதும் கறிவேப்பிலை சேர்த்து மீண்டும் கலக்க வேண்டும்.
வெங்காயத்தின் பச்சை வாசனை நீங்கும் வரை வதக்கிய பின்னர், இதில் தக்காளி, மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து கலக்க வேண்டும். இதையடுத்து, தேவையான அளவிற்கு தண்ணீர் ஊற்றலாம். இறுதியாக, கடாயை மூடி விட்டு சுமார் 10 நிமிடங்கள் வேக வைக்க வேண்டும்.
இவ்வாறு செய்தால் சுவையான தக்காளி கூட்டி ரெடியாகி விடும். இந்த தக்காளி கூட்டு தன்னுடைய கணவருக்கு மிகவும் பிடித்தமானது என்று அனிதா குப்புசாமி குறிப்பிட்டுள்ளார்.