சர்க்கரை நோய் என்றாலே பழங்களை நாம் தவிர்க்க வேண்டும் என்றுதான் நினைப்போம். ஆனால் பழங்களில் வைட்டமின்ஸ், நார்சத்து, ஆண்டி ஆக்ஸிடண்ட், இருக்கிறது. இது குடலின் நன்மைகள், நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் உதவுகிறது.
இந்நிலையில் சில பழங்களின் கிளைசிமிக் இண்டக்ஸ் குறைவாக இருக்கும் அந்த பழங்களை நாம் தேர்வு செய்து சாப்பிடலாம். இந்நிலையில் சர்க்கரை நோய் உள்ளவர்கள் பழங்கள் எடுத்துக்கொள்ளும் அளவில் கவனமாக இருத்தல் வேண்டும்.
சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு தனியாக ஒரு பழ வகையை கூற முடியாது. இதனால் உங்களின் ரத்த சர்க்கரை அளவை வைத்துதான் முடிவு செய்ய வேண்டும். உதாரணமாக சர்க்கரை நோய் கட்டுக்குள் உள்ளவர்கள் ஒரு நாளில் 150 கிராம் முதல் 200 கிராம் வரை பழங்கள் சாப்பிடலாம்.
ஆனால் உங்கள் ரத்த சர்க்கரை அளவு அதிகமாக இருந்தால், 100 கிராம் தான் எடுத்துக்கொள்ள வேண்டும். மேலும் பழங்களை காலை உணவு அல்லது மதிய உணவோடு சேர்த்து சாப்பிடக் கூடாது. நாம் சாப்பிடும் உணவில் அதிக கார்போஹைட்ரேட் இருப்பதால் இதை நாம் செய்யக்கூடாது.
சர்க்கரை நோயாளிகள் பழங்களை நன்றாக மென்று சாப்பிட வேண்டும். சாப்பாடு சாப்பிடும் சில மணி நேரங்களுக்கு முன்பு பழங்கள் சாப்பிடலாம். மேலும் பழங்களோடு அதிக புரோட்டீன் சேர்த்து சாப்பிட வேண்டும். உதாரணமாக நட்ஸுடன் பழங்கள் சேர்த்து சாப்பிடலாம். இதை நாம் காலை 11 மணியளவில் சாப்பிடலாம்.
சர்க்கரை நோயாளிகளுக்கு சிறந்த பழங்களாக இருப்பது ஆப்பிள், கொய்யா, ஆரஞ்சு, பப்பாளி, எலுமிச்சை வகை பழங்கள் . இதில் இருக்கும் வைட்டமின் சி நமது சதைகளின் சேதங்களை சரி செய்யும். நமது பல்லின் ஈர்களுகு வலிமை சேர்க்கும், மேலும் இதில் போலேட், வைட்டமின் பி, பி9 ஆகியவை இருப்பதால் சிவப்பு ரத்த அணுக்களை உருவாக்க உதவுகிறது.
இதுபோல் மாம்பழம், சப்போர்ட்டா, வாழைப்பழம், பலாப்பழம் , கிரேப்ஸ் ஆகியவையை அதிகமாக சாப்பிடக்கூடாது.