உப்பு உருண்டை, தென்னிந்தியாவின் பாரம்பரிய உணவுகளில் ஒன்றாகும். இதை காலை உணவு அல்லது மாலை நேரச் சிற்றுண்டியாகச் சுவைத்து சாப்பிடலாம். வீட்டிலேயே எளிதாக இந்த காரமான உணவைத் தயாரிப்பது எப்படி என்று அக்ஷயா வீட்டு சமையல் யூடியூப் பக்கத்தில் செய்து காட்டியிருப்பது பற்றி பார்ப்போம்.
Advertisment
தேவையான பொருட்கள்:
அரிசி கடுகு உளுத்தம் பருப்பு கடலைப் பருப்பு வெங்காயம் கறிவேப்பிலை பச்சை மிளகாய் உப்பு தேங்காய்
செய்முறை:
Advertisment
Advertisements
முதலில் அரிசியை நன்றாக ஊறவைத்து, பின்னர் கரகரப்பாக அரைத்து மாவாக்கிக் கொள்ளவும். ஒரு கடாயில் எண்ணெய் விட்டு, கடுகு, பருப்பு வகைகளைச் சேர்த்து தாளிக்கவும். பின்னர், பொடியாக நறுக்கிய வெங்காயம், கறிவேப்பிலை, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
தாளித்த இந்தக் கலவையை அரைத்து வைத்துள்ள அரிசி மாவுடன் சேர்க்கவும். அதனுடன் தேவையான அளவு உப்பு மற்றும் துருவிய தேங்காயையும் சேர்த்து நன்றாகக் கலக்கவும். இந்தக் கலவையை சிறு சிறு உருண்டைகளாகப் பிடித்து, இட்லி தட்டில் வைத்து ஆவியில் சுமார் 10-15 நிமிடங்கள் வேகவைத்து எடுக்கவும்.