கோவை அரசு போக்குவரத்து கழகத்தின் சார்பில் ஓய்வு பெற்ற பயனாளிகளுக்கு பண உதவிகள் செய்வதற்கு புதிய பஸ் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைக்க மேட்டுப்பாளையம் ரோட்டில் உள்ள போக்குவரத்து கழக அலுவலகத்தில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.
Advertisment
அமைச்சர் வரும் வரை மக்கள் வெயிலை மறந்து சிறிது நேரம் இளைபாறும் விதமாக வெயிலுக்கு தகுந்தார் போல இசை கச்சேரி நடைபெற்றது. சேரன் போக்குவரத்து தொழிலாளர்கள் சார்பில் இளையராஜாவின் இசைகள் பாடலாக இசை கருவிகளில் வாசிக்கப்பட்டது; வாசிக்கப்பட்ட ஒவ்வொரு இசையும் அனைவராலும் பாரட்டப்பட்டது.
பஸ் மட்டுமல்ல, இசையிலும் சிறப்பானவர்களே என்பது போல இசை வாசிப்பு இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.