வீட்டில் ராகி மாவு இருந்தால், இந்த தோசையை டிரை பண்ணுங்க ரொம்ப சுவையாக இருக்கும். அவ்ளோ சத்துக்கள் இருக்கிறது.
தேவையான பொருட்கள்
ராகி (அ) கேழ்வரகு மாவு – 2 கப்
பச்சரிசி – 1/2 கப்
மோர் – 1 கப்
வெங்காயம் – 1
பச்சை மிளகாய் – 3
கறிவேப்பிலை – 2
கொத்தமல்லி –
உப்பு – தேவையான அளவு
எண்ணெய்
கடுகு, உளுந்தம் பருப்பு – 1/2 டீ ஸ்பூன்
செய்முறை
கேழ்வரகு தோசை தயார் செய்ய வேண்டும் என்று முடிவு செய்தால் நீங்கள் முதலில் செய்ய வேண்டியது அரசி ஊற வைப்பது தான். எனவே 1/2 கப் பச்சரிசி எடுத்து 1 மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்கவும். பிறகு அவற்றை மிக்சியில் நொறுநொறுவென அரைத்துக்கொள்ளவும்.
அதன் பின்னர், கேழ்வரகு மாவை எடுத்து மாவு கரைக்கும் பாத்திரத்தில் இடவும். பிறகு அதில் முன்னர் அரைத்து வைத்துள்ள பச்சரிசி மாவையும், சிறிதளவு மோரையும் சேர்த்து நன்கு மிக்ஸ் செய்து தனியாக வைத்துக் கொள்ளவும்.
இப்போது, வெங்காயம், பச்சை மிளகாய், கருவேப்பிலை ஆகியவற்றை நன்கு பொடிப்பொடியாக நறுக்கிக்கொள்ளவும். பிறகு தோசைக்கல்லை சூடேற்றி அதில் கடுகு, உளுந்தம் பருப்பு சேர்த்து பொரிந்ததும், வெங்காயம் கருவேப்பிலையை சேர்த்து நன்கு வதக்கவும். பொன்னிறமாக அவற்றை வதக்கிய பின்னர், கலந்து வைத்துள்ள மாவுடன் சேர்த்துக்கொள்ளவும். அதோடு பொடிப்பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலைகளையும் சேர்த்துக்கொள்ளவும்.
இப்போது தோசைக்கல்லை சூடு செய்து அதில் தோசைகளாக ஊற்றவும். அவற்றை ஒரு மூடியால் மூடி நன்கு வெந்ததும் இட்லி பொடி, தேங்காய் அல்லது கார சட்னிகளுடன் சேர்த்து ருசிக்கவும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“