ரெகுலர் டீ வேண்டாம்.. புது புத்துணர்வுக்கு இந்த 5 வகை டீ டிரை பண்ணுங்க!
மச்சான் ஒரு டீ சாப்பிடலாமா என்பதுதான் நம்மக்கு அதிக புத்தணர்வு ஊட்டும் வாக்கியம். மருத்துவ ரீதியாகவும் டீ குடிப்பது பல நன்மைகளை தருகிறது. வழக்கமான பால் கலந்த டீயைவிட இந்த 5 வகை ஸ்பெஷல் டீயை குடித்தால் மேலும் நன்மைகள் கிடைக்கலாம். இதைப் பற்றி விரிவாக பார்க்கலாம்.
நம்மில் பலருக்கு உடல் மற்றும் மச்சோர்வு அதிகம் ஏற்படும். நாம் கொஞ்சம் ரிலாக்ஸாக இருக்க எப்பவும் நாடுவது டீ தான். மச்சான் ஒரு டீ சாப்பிடலாமா என்பதுதான் நம்மக்கு அதிக புத்தணர்வு ஊட்டும் வாக்கியம். மருத்துவ ரீதியாகவும் டீ குடிப்பது பல நன்மைகளை தருகிறது. வழக்கமான பால் கலந்த டீயைவிட இந்த 5 வகை ஸ்பெஷல் டீயை குடித்தால் மேலும் நன்மைகள் கிடைக்கலாம். இதைப் பற்றி விரிவாக பார்க்கலாம்.
Advertisment
கெமமாயில் டீ அல்லது சீமை சாமந்தி டீ
நீங்கள் அதிக அழுத்ததில் வேலை செய்து முடித்த பிறகு இந்த டீ குடித்தால் அப்படி ஒரு மனநிறைவு ஏற்படும். உங்களுக்கு நல்ல தூக்கம் வருவதோடு மூளையின் சிந்தனை திறனையும் அதிகப்படுத்தும்.
கஹ்வா டீ
கிரீன் டீ இலைகள், இஞ்சி, கிராம்பு போன்ற மசாலா பொருட்கள், நட்ஸ், குங்குமப்பூ ஆகியவற்றை வைத்து இந்த வகை டீ தயாரிக்கப்படுகிறது. இதை குடித்தால், உடலில் மன அழுத்தத்தை உற்பதி செய்யும் ஹார்மோன் அளவை குறைக்க உதவுகிறது. மேலும் உடலில் உள்ள நச்சுகளை வெளியேற்ற பயன்படுகிறது.
சேஜ் டீ
இது ஒரு வகை மூலிகை டீ. இது உடல் வலியை குறைக்க உதவுகிறது. மேலும் நினைவுசக்தியை அதிகரிப்பதோடு மனநிலையில் ஏற்படும் மாற்றத்தை சீர்படுத்த உதவுகிறது.
அஸ்வதந்தா டீ
காய்ச்சலை குணப்படுத்துவதோடு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. உடல் மற்றும் மனநலத்திற்கு உறுதுணையாக செயல்படுகிறது. வலிகளிலிருந்து நீங்க இயற்கையாகவே நமது உடலில் சுரக்கும் வலி நிவாரணியான எண்டோர்ஃபின்ஸ் (endorphins) உற்பத்தி செய்ய உதவுகிறது.
துளசி டீ
இதன் மனமே நமது மனத்திற்கு ஒரு அமைதியை தருகிறது. மேலும் மன அழுத்தம் ஏற்படாமல் பார்த்துக்கொள்கிறது. நமது மனத்திற்கு ஒரு தெளிவு ஏற்பட உதவுகிறது.
Advertisment
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Follow us:
Subscribe to our Newsletter!
Be the first to get exclusive offers and the latest news