தக்காளி மற்றும் தேங்காய் இருந்தாலே இந்த குழம்பை வைத்துவிட முடியும். தவறாம டிரை பண்ணிபாருங்க.
தேவையான பொருட்கள்
தக்காளி
தேங்காய் துருவியது
மிளகாய்த்தூள்
மஞ்சள் தூள்
கருவேப்பிலை
கசகசா
உப்பு
எண்ணெய்
பச்சை மிளகாய்
செய்முறை : தக்காளியை நன்றாக தண்ணீர் ஊற்றி வேக வைக்க வேண்டும். தொடர்ந்து ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி, கடுகு, சீரகம் சேர்த்து நன்றாக வதக்கவும் தொடர்ந்து தேங்காய் மற்றும் கசகசா அரைத்ததை சேர்த்துக்கொள்ள வேண்டும். 3 நிமிடங்களில் வேகவிட்ட பிறகு தக்காளி அவித்ததை சேர்த்துகொள்ள வேண்டும். தொடர்ந்து உப்பு, மிளகாய் தூள், மஞ்சள் பொடி ஆகியவற்றை கலக்க வேண்டும். 10 நிமிடங்கள் மூடி வைத்துவிட்டு, அடுப்பை அணைக்கவும்.